திங்கள், 30 ஏப்ரல், 2018

துணைவி 400

 சொல்லால்  அடித்து சுகமாய்  வறுத்தேன் --நீயோ
சுணக்கம்  எதுவும்  கொள்ளவில்லை
கல்லாலடி  படும்  கனியும்  ஆனாய் --எனக்கு
காலம்   தந்திட்ட  துணையுமானாய் (சொல்லால் )

உள்ள சொந்தம்  எல்லாம் நீ   தந்தது --என்
உறவை  மட்டுமே  நான்  தந்தேன்
கள்ளமில்லா  வெள்ளை மனம் --எவரையும்
கடிந்து   கொள்ளாத   நல்ல  மனம்  (சொல்லால்)

பிள்ளைப்  பாசம்  நிறைய   உண்டு --அவர்
பேசிடும்   வார்த்தைகள்   கற்கண்டு
கொள்ளை  இன்பம்   கொடுத்தவளே --எனக்கு
குறைகள்   வந்திடாமல்   தடுத்தவளே  (சொல்லால்)

நினைவு  என்பது  உள்ளவரை --இங்கு
நித்தமும்   நீதான்  பள்ளியறை
தொடர்ந்து  வந்த  துன்பத்தினை -ஒரு
தூசெனத்   தள்ளியே  ஜெயித்தவளே (சொல்லால்)

மக்கள்  போற்றிடும்   தாயானாய் --எந்தன்
மனதில்   வாழும்   திறமானாய்
எட்டுத்   திக்கும்  உன்புகழ்  முழங்குதம்மா --உன்னால்
என்குலம்   மண்ணிலே   விளங்குதம்மா (சொல்லால்)

குங்குமம்  நிலைத்திடும்   வரம்  வேண்டும் --எங்கள்
குருவாயி   அருளும்   துணை   வேண்டும்
எங்கும்   அன்பு நிலை   வர வேண்டும் --இங்கே
ஏழைகள்  நல்வாழ்வு   பெற வேண்டும் (சொல்லால்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக