செந்தமிழ் நாட்டுச் செல்வங்களே - நான்
சிறப்பென சொல்வதைக் கேளுங்களேன்
நம் தமிழ் மொழியென்றும் பெரியதெனும் -நல்ல
உண்மையை நன்மையை உணர்வீரே
ஆயிரம் கோடி பேர் பேசிடினும் -நம்
அன்னை த் தமிழுக் கீடாமோ
பாயிரம் ஈர்க்கும் மொழித் திறமன்றோ -என்றும்
பல்லுழி காலங்கள் நிலைத்திருக்கும்
தீயினால் வெந்தும் மடியாது -பல
திருடர்கள் திருடியும் குறையாது
வாயினில் பேசிட ன் மணந்திடுமே -நாம்
வளம் பெற நாள் வழியினைக் காட்டிடுமே
எத்தனை மன்னர்கள் படை யெடுத்தார் -நமது
எல்லாச் செல்வங்கள் சூறை யிட்டார்
சத்திய தமிழ் செல்வம் வாழுதம்மா -அதன்
சாதனை உலகினை ஆளுதம்மா
இயற்கை சீற்றத்தில் அழியாமல் -உள்ள
இளமை என்றுமே குறையாமல்
கற்பவர் தொகையோ பெரிதாகி -தெய்வ
கன்னியாய் வாழ்கிறாள் உயிராக
சிறப்பென சொல்வதைக் கேளுங்களேன்
நம் தமிழ் மொழியென்றும் பெரியதெனும் -நல்ல
உண்மையை நன்மையை உணர்வீரே
ஆயிரம் கோடி பேர் பேசிடினும் -நம்
அன்னை த் தமிழுக் கீடாமோ
பாயிரம் ஈர்க்கும் மொழித் திறமன்றோ -என்றும்
பல்லுழி காலங்கள் நிலைத்திருக்கும்
தீயினால் வெந்தும் மடியாது -பல
திருடர்கள் திருடியும் குறையாது
வாயினில் பேசிட ன் மணந்திடுமே -நாம்
வளம் பெற நாள் வழியினைக் காட்டிடுமே
எத்தனை மன்னர்கள் படை யெடுத்தார் -நமது
எல்லாச் செல்வங்கள் சூறை யிட்டார்
சத்திய தமிழ் செல்வம் வாழுதம்மா -அதன்
சாதனை உலகினை ஆளுதம்மா
இயற்கை சீற்றத்தில் அழியாமல் -உள்ள
இளமை என்றுமே குறையாமல்
கற்பவர் தொகையோ பெரிதாகி -தெய்வ
கன்னியாய் வாழ்கிறாள் உயிராக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக