திருமகளே உனையன்றித் துணை யாரம்மா -உந்தன்
திருவடி ஒன்றுதான் கதியே அம்மா
பெருமாளின் திரு மார்பில் உறைபவளே -அழியா
செல்வங்கள் பல கோடி தருபவளே
கடல் நீரின் நடுவில் அன்றோ குடி இருப்பு -இங்கு
கதியற்றோர் நல வாழ்வு உன்பொறுப்பு
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவா -என்றும்
உயர்வாக நான் வாழ வழி செய்யம்மா
கண் திறக்க வரும் கவலை பறந்தோடுமே --கொடிய
கரு நாகக் குடைக் கீழே அமர்ந்தவளே
மண் சிறக்க மனைதோறும் வருபவளே -உலகில்
மகாலட்சுமி எனும் நாமம் மகத்தானதே
அழகான திருமாலும் உனக்கானவர் -நீயோ
அழைத்திடும் போது வரும் கணக்கானவள்
நிலம் யாவும் செழித்தோங்க வரம் தாருமே -எனது
நினைவெல்லாம் மலராக்கி உனைப் பாடுவேன்
உலகோர் கள் நலம் வாழ வழி செய்கவே -உயிர்கள்
உள்ளத்தில் உண்மை யன்பு நிறைந்தோங்கவே
கலகங்கள் போர் மூளும் நிலைமாறவே -எங்கள்
கஜலட்சுமி தாயே உந்தன் அருள் வேண்டினேன்
திருவடி ஒன்றுதான் கதியே அம்மா
பெருமாளின் திரு மார்பில் உறைபவளே -அழியா
செல்வங்கள் பல கோடி தருபவளே
கடல் நீரின் நடுவில் அன்றோ குடி இருப்பு -இங்கு
கதியற்றோர் நல வாழ்வு உன்பொறுப்பு
உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவா -என்றும்
உயர்வாக நான் வாழ வழி செய்யம்மா
கண் திறக்க வரும் கவலை பறந்தோடுமே --கொடிய
கரு நாகக் குடைக் கீழே அமர்ந்தவளே
மண் சிறக்க மனைதோறும் வருபவளே -உலகில்
மகாலட்சுமி எனும் நாமம் மகத்தானதே
அழகான திருமாலும் உனக்கானவர் -நீயோ
அழைத்திடும் போது வரும் கணக்கானவள்
நிலம் யாவும் செழித்தோங்க வரம் தாருமே -எனது
நினைவெல்லாம் மலராக்கி உனைப் பாடுவேன்
உலகோர் கள் நலம் வாழ வழி செய்கவே -உயிர்கள்
உள்ளத்தில் உண்மை யன்பு நிறைந்தோங்கவே
கலகங்கள் போர் மூளும் நிலைமாறவே -எங்கள்
கஜலட்சுமி தாயே உந்தன் அருள் வேண்டினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக