நில்லு நில்லு நிலவம்மா -இப்போ
நித்தமும் போவது எங்கம்மா
சொல்ல முடிந்தால் சொல்லிவிடு -நீ
புதிய சுகம் எனக்கு தந்துவிடு (பெண் )
ஊரை சுற்றியே நான் வருவேன் -தினம்
புது உறவும் பலமும் தான் தருவேன்
பெயரை என்றும் நான் காத்திடுவேன் -தினம்
பிறர்க்கு அதிகம் இன்பங்கள் தந்திடுவேன் (நிலவு )
கவிஞர்கள் பாடல்கள் உனைப் பாடும் -பெரும்
காட்டினில் பறவைகள் நல் லிசை கூட்டும்
புவியின் பெருமைகள் சுமந்து வரும் -என்றும்
புனிதம் கொண்ட எங்கள் திருமகளே (பெண்)
நிலத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் -வரும்
நிலவால் நிஜமாய் நித்தமும் மகிழ்கிறது
உழைத்துக் கலைத்தவர் உறங்கையிலே -நான்
ஊர் சுற்றிக் காவல் செய்திடுவேன் -(நிலவு )
காலம் வேகமாய் ஓடியே போனாலும் -வாழும்
கவிதைகள் வடிவில் என்றுமே நீயிருப்பாய்
கோல நிலவொளி காட்டி மனிதர்கள் -மனம்
குளிர்ந்திடல் செய்குவாய் நிலவுத் தாயே (பெண் )
நித்தமும் போவது எங்கம்மா
சொல்ல முடிந்தால் சொல்லிவிடு -நீ
புதிய சுகம் எனக்கு தந்துவிடு (பெண் )
ஊரை சுற்றியே நான் வருவேன் -தினம்
புது உறவும் பலமும் தான் தருவேன்
பெயரை என்றும் நான் காத்திடுவேன் -தினம்
பிறர்க்கு அதிகம் இன்பங்கள் தந்திடுவேன் (நிலவு )
கவிஞர்கள் பாடல்கள் உனைப் பாடும் -பெரும்
காட்டினில் பறவைகள் நல் லிசை கூட்டும்
புவியின் பெருமைகள் சுமந்து வரும் -என்றும்
புனிதம் கொண்ட எங்கள் திருமகளே (பெண்)
நிலத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் -வரும்
நிலவால் நிஜமாய் நித்தமும் மகிழ்கிறது
உழைத்துக் கலைத்தவர் உறங்கையிலே -நான்
ஊர் சுற்றிக் காவல் செய்திடுவேன் -(நிலவு )
காலம் வேகமாய் ஓடியே போனாலும் -வாழும்
கவிதைகள் வடிவில் என்றுமே நீயிருப்பாய்
கோல நிலவொளி காட்டி மனிதர்கள் -மனம்
குளிர்ந்திடல் செய்குவாய் நிலவுத் தாயே (பெண் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக