வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பெண் ---நிலவு 348

நில்லு     நில்லு    நிலவம்மா -இப்போ
நித்தமும்    போவது    எங்கம்மா
சொல்ல    முடிந்தால்    சொல்லிவிடு -நீ
புதிய    சுகம்    எனக்கு   தந்துவிடு    (பெண் )

ஊரை  சுற்றியே    நான்  வருவேன்  -தினம்
புது உறவும்    பலமும்    தான்    தருவேன்
பெயரை   என்றும்    நான்    காத்திடுவேன் -தினம்
பிறர்க்கு    அதிகம்    இன்பங்கள்   தந்திடுவேன்   (நிலவு )

கவிஞர்கள்   பாடல்கள்   உனைப்    பாடும் -பெரும்
காட்டினில்    பறவைகள்    நல் லிசை   கூட்டும்
புவியின்  பெருமைகள்    சுமந்து  வரும்  -என்றும்
புனிதம்   கொண்ட    எங்கள்   திருமகளே    (பெண்)

நிலத்தில்    வாழும்    உயிர்கள்   எல்லாம் -வரும்
நிலவால்   நிஜமாய்   நித்தமும்   மகிழ்கிறது
உழைத்துக்    கலைத்தவர்    உறங்கையிலே -நான்
ஊர் சுற்றிக்    காவல்    செய்திடுவேன் -(நிலவு )

காலம்    வேகமாய்   ஓடியே    போனாலும் -வாழும்
கவிதைகள்   வடிவில்   என்றுமே    நீயிருப்பாய்
கோல    நிலவொளி    காட்டி     மனிதர்கள் -மனம்
குளிர்ந்திடல்   செய்குவாய்    நிலவுத் தாயே (பெண் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக