அலைவாய்க் கடலின் கரையோரம் -நல்
அழகிய செந்தூர் தலமதிலே
நிலையாய்க் கொண்ட திருவருளே -எம்
நெஞ்சம் நிறைந்திடும் செந்தில் வேலோனே
சக்தியின் மகனெனப் வளர்ந்தாலும் -அன்று
சரவணப் பொய்கையில் மலர்ந்தாயே
பக்தரைக் காத்திடும் பரம்பொருளே -உனது
பாதங்கள் நினைந்தே வணங்குகிறோம்
இறவாத் தமிழினை நீயளித்தாய் -மாந்தரின்
இதயங்கள் தன்னையும் சிறையெடுத்தாய்
மறவோம் உந்தன் திருநாமம் -உனது
மகிமை போற்றி பாடிடுவோம்
சூரன் அழிந்திடப் போரிட்டாய் - சிவ
சுப்ர மன்ய ரன்ரே பேரெடுத்தாய்
பேறுகள் பெற்றிட செய்வாயே -எங்கள்
பெம்மான் முருகா அழகேசா
செந்தூர் வந்தால் சுபஜெயமாகும் -வரும்
தீவினை யாவுமே பறந்தோடும்
பைந்தமிழ் உலகினில் அரசாளும் -அடியேன்
பாடலும் முருகன் காலடி மலராகும்
அழகிய செந்தூர் தலமதிலே
நிலையாய்க் கொண்ட திருவருளே -எம்
நெஞ்சம் நிறைந்திடும் செந்தில் வேலோனே
சக்தியின் மகனெனப் வளர்ந்தாலும் -அன்று
சரவணப் பொய்கையில் மலர்ந்தாயே
பக்தரைக் காத்திடும் பரம்பொருளே -உனது
பாதங்கள் நினைந்தே வணங்குகிறோம்
இறவாத் தமிழினை நீயளித்தாய் -மாந்தரின்
இதயங்கள் தன்னையும் சிறையெடுத்தாய்
மறவோம் உந்தன் திருநாமம் -உனது
மகிமை போற்றி பாடிடுவோம்
சூரன் அழிந்திடப் போரிட்டாய் - சிவ
சுப்ர மன்ய ரன்ரே பேரெடுத்தாய்
பேறுகள் பெற்றிட செய்வாயே -எங்கள்
பெம்மான் முருகா அழகேசா
செந்தூர் வந்தால் சுபஜெயமாகும் -வரும்
தீவினை யாவுமே பறந்தோடும்
பைந்தமிழ் உலகினில் அரசாளும் -அடியேன்
பாடலும் முருகன் காலடி மலராகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக