வியாழன், 12 ஏப்ரல், 2018

திருச்செந்தூர் வேலன் 345

அலைவாய்க்    கடலின்  கரையோரம் -நல்
அழகிய   செந்தூர்   தலமதிலே
நிலையாய்க்   கொண்ட   திருவருளே -எம்
நெஞ்சம்  நிறைந்திடும்   செந்தில்  வேலோனே

சக்தியின்   மகனெனப்   வளர்ந்தாலும் -அன்று
சரவணப்   பொய்கையில்   மலர்ந்தாயே
பக்தரைக்   காத்திடும்   பரம்பொருளே -உனது
பாதங்கள்   நினைந்தே   வணங்குகிறோம்

இறவாத்   தமிழினை   நீயளித்தாய் -மாந்தரின்
இதயங்கள்   தன்னையும்   சிறையெடுத்தாய்
மறவோம்   உந்தன்   திருநாமம் -உனது
மகிமை   போற்றி   பாடிடுவோம்

சூரன்   அழிந்திடப்    போரிட்டாய் - சிவ
சுப்ர  மன்ய  ரன்ரே   பேரெடுத்தாய்
பேறுகள்   பெற்றிட  செய்வாயே -எங்கள்
பெம்மான்    முருகா   அழகேசா

செந்தூர்   வந்தால்   சுபஜெயமாகும் -வரும்
தீவினை   யாவுமே   பறந்தோடும்
பைந்தமிழ்   உலகினில்   அரசாளும் -அடியேன்
பாடலும்   முருகன் காலடி   மலராகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக