திங்கள், 30 ஏப்ரல், 2018

அன்னை 396

அம்மா  என்று நான்  அழைக்கையிலே -புது
ஆனந்தம்  மனசுக்குள்  பிறக்குதம்மா
சும்மா  கிடந்த  பல  எண்ணங்களும் -இன்று
சுகமெனும்   கடலிலே  மகிழுதம்மா  (அம்மா)

இரத்தத்தைப்  பாலாக்கி  வளர்த்தாயே -எனக்காய்
இரவு ம்  பகலும்  விழித்தவள் நீயே
பத்திய  உணவினை  தினம்  நீயுண்டு -நல்ல
பண்புகள்  பெருகிட  வளர்த்தாயே  (அம்மா)

பிள்ளைகள்  உண்டு  மகிழ்வாரென்று  -நீயும்
பிரியமாய்  உணவுகள்  செய்து  வைப்பாய்
தொல்லை  பலவும்  தினமும்  தந்தேன் -எந்தன்
தூண்டா மணி விளக்கே  நான்  உன்னடிமை (அம்மா)

உலகம்  தினமும்  உருண்டபடி  இருக்கும் -அதில்
உனதன்பு  என்றும்  நிஜமாய்  குடியிருக்கும்
கலகங்கள்  உலகினை  அழிக்க  வந்தும் -என்
கண் கண்ட  தெய்வமே  நீயென்றும்  சாஸ்வதமே (அம்மா)

செல்வம்  பலகோடி  நான்  சேர்த்தாலும் -உனது
சேவை  மனதிற்கு  என்றும்  ஈடாமோ
கள்ள வழி  நானும்  சென்று  அழியாமல் -எனையே
காத்து  நிற்கும்  தாயெனும்  பரம்பொருளே (அம்மா)

உன்னை  தினம்  எண்ணித்  துதித்திடுவேன் -நல்ல
உத்தம  வழிதனில்  நான்  சென்றிடுவேன்
பொன்னைப்  போல  மின்னும்  புனிதவதி -உன்னை
புரிந்து  கொண்டதால்  பாடுவேன்  இந்த   துதி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக