அம்மா என்று நான் அழைக்கையிலே -புது
ஆனந்தம் மனசுக்குள் பிறக்குதம்மா
சும்மா கிடந்த பல எண்ணங்களும் -இன்று
சுகமெனும் கடலிலே மகிழுதம்மா (அம்மா)
இரத்தத்தைப் பாலாக்கி வளர்த்தாயே -எனக்காய்
இரவு ம் பகலும் விழித்தவள் நீயே
பத்திய உணவினை தினம் நீயுண்டு -நல்ல
பண்புகள் பெருகிட வளர்த்தாயே (அம்மா)
பிள்ளைகள் உண்டு மகிழ்வாரென்று -நீயும்
பிரியமாய் உணவுகள் செய்து வைப்பாய்
தொல்லை பலவும் தினமும் தந்தேன் -எந்தன்
தூண்டா மணி விளக்கே நான் உன்னடிமை (அம்மா)
உலகம் தினமும் உருண்டபடி இருக்கும் -அதில்
உனதன்பு என்றும் நிஜமாய் குடியிருக்கும்
கலகங்கள் உலகினை அழிக்க வந்தும் -என்
கண் கண்ட தெய்வமே நீயென்றும் சாஸ்வதமே (அம்மா)
செல்வம் பலகோடி நான் சேர்த்தாலும் -உனது
சேவை மனதிற்கு என்றும் ஈடாமோ
கள்ள வழி நானும் சென்று அழியாமல் -எனையே
காத்து நிற்கும் தாயெனும் பரம்பொருளே (அம்மா)
உன்னை தினம் எண்ணித் துதித்திடுவேன் -நல்ல
உத்தம வழிதனில் நான் சென்றிடுவேன்
பொன்னைப் போல மின்னும் புனிதவதி -உன்னை
புரிந்து கொண்டதால் பாடுவேன் இந்த துதி
ஆனந்தம் மனசுக்குள் பிறக்குதம்மா
சும்மா கிடந்த பல எண்ணங்களும் -இன்று
சுகமெனும் கடலிலே மகிழுதம்மா (அம்மா)
இரத்தத்தைப் பாலாக்கி வளர்த்தாயே -எனக்காய்
இரவு ம் பகலும் விழித்தவள் நீயே
பத்திய உணவினை தினம் நீயுண்டு -நல்ல
பண்புகள் பெருகிட வளர்த்தாயே (அம்மா)
பிள்ளைகள் உண்டு மகிழ்வாரென்று -நீயும்
பிரியமாய் உணவுகள் செய்து வைப்பாய்
தொல்லை பலவும் தினமும் தந்தேன் -எந்தன்
தூண்டா மணி விளக்கே நான் உன்னடிமை (அம்மா)
உலகம் தினமும் உருண்டபடி இருக்கும் -அதில்
உனதன்பு என்றும் நிஜமாய் குடியிருக்கும்
கலகங்கள் உலகினை அழிக்க வந்தும் -என்
கண் கண்ட தெய்வமே நீயென்றும் சாஸ்வதமே (அம்மா)
செல்வம் பலகோடி நான் சேர்த்தாலும் -உனது
சேவை மனதிற்கு என்றும் ஈடாமோ
கள்ள வழி நானும் சென்று அழியாமல் -எனையே
காத்து நிற்கும் தாயெனும் பரம்பொருளே (அம்மா)
உன்னை தினம் எண்ணித் துதித்திடுவேன் -நல்ல
உத்தம வழிதனில் நான் சென்றிடுவேன்
பொன்னைப் போல மின்னும் புனிதவதி -உன்னை
புரிந்து கொண்டதால் பாடுவேன் இந்த துதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக