வெள்ளி, 20 ஏப்ரல், 2018

முத்தமிழ் 368

திருமால்   மருகன்    அழகேசன் -அவன்
திருக்குமரன்   என்றிடும்  அருள் நேசன் 
வருவான்    உனைத் தேடி   மயில் மீதில் -நல்ல 
வளமே    பெறலாம்    புவி  மீதில் 

குருவாய்    அமர்ந்தான்    சுவாமிமலை -திரு 
குகனாய்    நின்றான்      திருப்பழனியிலே 
ஒரு நாள்   திருநாள்    அவன் வருநாளே -நீ 
உயர்வே    அடைவாய்    இனிமேலே 

தமிழைக்    காப்பான்    எந்நாளும் -அந்த 
தலைவன்    புகழோ    வெகு  நீளம் 
அமிழ்தாய்    இனிப்பது   அவன் குரலே -நம் 
ஆனைமுகன்    அவனது    உடன்பிறப்பே 

மனதால்   துதித்திட    வருவானே -குற
மாதினைக்   கொண்டான்    துணையாக 
அழகாய்    முருகனும்    தெரிவானே -அவன் 
அடியார்   மனதிலே    உறைவானே 

திருவாய்    சொல்லும்    அவன்பேரை -என்றும் 
திரளுமே     கூட்டம்    செந்தூரில் 
முருகா   வென்று தான்   அலை    மோதும் -நமது 
முத்தமிழ்    காப்பான்    எப்போதும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக