திருமால் மருகன் அழகேசன் -அவன்
திருக்குமரன் என்றிடும் அருள் நேசன்
வருவான் உனைத் தேடி மயில் மீதில் -நல்ல
வளமே பெறலாம் புவி மீதில்
குருவாய் அமர்ந்தான் சுவாமிமலை -திரு
குகனாய் நின்றான் திருப்பழனியிலே
ஒரு நாள் திருநாள் அவன் வருநாளே -நீ
உயர்வே அடைவாய் இனிமேலே
தமிழைக் காப்பான் எந்நாளும் -அந்த
தலைவன் புகழோ வெகு நீளம்
அமிழ்தாய் இனிப்பது அவன் குரலே -நம்
ஆனைமுகன் அவனது உடன்பிறப்பே
மனதால் துதித்திட வருவானே -குற
மாதினைக் கொண்டான் துணையாக
அழகாய் முருகனும் தெரிவானே -அவன்
அடியார் மனதிலே உறைவானே
திருவாய் சொல்லும் அவன்பேரை -என்றும்
திரளுமே கூட்டம் செந்தூரில்
முருகா வென்று தான் அலை மோதும் -நமது
முத்தமிழ் காப்பான் எப்போதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக