அல்லிக் குளத்தின் ஓரம் -ஒரு
அழகிய சோலை தன்னிலே
புள்ளி மயில் வேலன் -வந்தே
புகன்ற மொழி நினைவிலில்லையா
கண்களில் முத்தம் வைத்தார் =என்
கனியிதழ் சுத்தம் செய்தார்
என்னையே சிலிர்க்க வைத்தார் -அவர்
இன்னும் என்னிடம் வரவில்லையே
கத்தும் கடல் நடுவில் -பலமுறை
காதல் பயணம் போகையிலே
முத்தம் நித்தம் தந்தவர்க்கு -எனோ
மோக நினைவு இல்லையோ
தன்னந் தனியாக நானும் -காதல்
தாகத்தில் துடித்துமே தவிக்கையிலெ
கன்னம் சிவக்க வைத்த -எந்தன்
கந்தனுக்கு என்ன வேலையோ
பின்னல் சடையினை இழுத்தார் -எனக்கு
பேரின்பம் கோடி தந்தார்
அண்ணல் அவரை மறவேன் -இன்றே
ஆறுமுகனை வந்திடச் சொல்லடி
ஊரும் உள்ள உறவும் போச்சே -தினமும்
உழன்று தவித்திட லாச்சே
ஏறு மயில் வேலன் என்னை நாடி -கன்னி
என்னிடம் எப்போ வருவாரடி
அழகிய சோலை தன்னிலே
புள்ளி மயில் வேலன் -வந்தே
புகன்ற மொழி நினைவிலில்லையா
கண்களில் முத்தம் வைத்தார் =என்
கனியிதழ் சுத்தம் செய்தார்
என்னையே சிலிர்க்க வைத்தார் -அவர்
இன்னும் என்னிடம் வரவில்லையே
கத்தும் கடல் நடுவில் -பலமுறை
காதல் பயணம் போகையிலே
முத்தம் நித்தம் தந்தவர்க்கு -எனோ
மோக நினைவு இல்லையோ
தன்னந் தனியாக நானும் -காதல்
தாகத்தில் துடித்துமே தவிக்கையிலெ
கன்னம் சிவக்க வைத்த -எந்தன்
கந்தனுக்கு என்ன வேலையோ
பின்னல் சடையினை இழுத்தார் -எனக்கு
பேரின்பம் கோடி தந்தார்
அண்ணல் அவரை மறவேன் -இன்றே
ஆறுமுகனை வந்திடச் சொல்லடி
ஊரும் உள்ள உறவும் போச்சே -தினமும்
உழன்று தவித்திட லாச்சே
ஏறு மயில் வேலன் என்னை நாடி -கன்னி
என்னிடம் எப்போ வருவாரடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக