புதன், 18 ஏப்ரல், 2018

அல்லிக்குளம் 361

அல்லிக்    குளத்தின்  ஓரம் -ஒரு
அழகிய    சோலை    தன்னிலே
புள்ளி    மயில்     வேலன் -வந்தே
புகன்ற    மொழி    நினைவிலில்லையா

கண்களில்   முத்தம்    வைத்தார் =என்
கனியிதழ்   சுத்தம்   செய்தார்
என்னையே   சிலிர்க்க   வைத்தார் -அவர்
இன்னும்   என்னிடம்   வரவில்லையே

கத்தும்   கடல்   நடுவில் -பலமுறை
காதல்    பயணம்   போகையிலே
முத்தம்   நித்தம்   தந்தவர்க்கு -எனோ
மோக     நினைவு   இல்லையோ

தன்னந்    தனியாக   நானும் -காதல்
தாகத்தில்   துடித்துமே  தவிக்கையிலெ
கன்னம்   சிவக்க   வைத்த -எந்தன்
 கந்தனுக்கு    என்ன   வேலையோ

பின்னல்   சடையினை    இழுத்தார் -எனக்கு
பேரின்பம்   கோடி    தந்தார்
அண்ணல்   அவரை    மறவேன் -இன்றே
ஆறுமுகனை   வந்திடச்   சொல்லடி

ஊரும்    உள்ள உறவும்    போச்சே  -தினமும்
உழன்று    தவித்திட     லாச்சே
ஏறு மயில்    வேலன்   என்னை நாடி -கன்னி
என்னிடம்   எப்போ    வருவாரடி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக