வியாழன், 5 ஏப்ரல், 2018

எதிர்காலம் 331

வட்டக்  கரிய  விழி எனைத்  தொட்டு  இழுக்குதடி -உன்னை
விட்டுப்  பிரிய  மனம்  விஷமாய்   மாறுதடி


கொட்டி   அளப்பதென்ன  நீ யொரு  கொடிய  நோயாளி -என்னை
கிட்டே  நெருங்கி  வந்தால்  உனக்கு  கிடைக்கும்  மரியாதை


வானத்தையும்  அளந்து  சீர்வரிசை  தந்திடுவேன் -அடி
 கான  கருங்  குயிலே  கொஞ்சம்  கருணை  செய்திடடி


என்ன  நினைத்து  நீயும்  என்னிடம்  ஏங்கி  சிரிக்கின்றாய் -உன்
கன்னம்  சிவப்பதற்கு  நானும்  கைநிறைய  தருவேன்


அடித்தால்  சிரிப்பேனே  என்  அழகு  பூங்கிளியே -அந்த
ஆசை  என்னை  மீறி  உன்மேல்  ஆவல்  கொள்ளுதடி


உன்னை  ஒருநாளும்  நான்  உறவாய்  நினைக்கவில்லை -அட
தென்னை  மரம்  போல  நீயும்  தெருவினில்  நிற்பாயடா


உயர்ந்த  மரமானால்  உனக்கு  உத்தரம்  நானாவேன் -நன்கு
மலர்ந்த   பூங்கொடியே   இந்த  மாமன்  முகம்  பாரடி


சொந்தம்   என்று  சொல்லி  எனோ  சுற்றி  வருகின்றாய் -உனது
மந்த   புத்தியிலே   உந்தன்  மனமும்  குழம்புகிறாய்


எலியும்  பூனையென  இருந்தோம்  சிலகாலம் -ஆனால்
இனிமேல்  இருவருக்கும்  இருக்கு  எதிர்காலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக