வட்டக் கரிய விழி எனைத் தொட்டு இழுக்குதடி -உன்னை
விட்டுப் பிரிய மனம் விஷமாய் மாறுதடி
கொட்டி அளப்பதென்ன நீ யொரு கொடிய நோயாளி -என்னை
கிட்டே நெருங்கி வந்தால் உனக்கு கிடைக்கும் மரியாதை
வானத்தையும் அளந்து சீர்வரிசை தந்திடுவேன் -அடி
கான கருங் குயிலே கொஞ்சம் கருணை செய்திடடி
என்ன நினைத்து நீயும் என்னிடம் ஏங்கி சிரிக்கின்றாய் -உன்
கன்னம் சிவப்பதற்கு நானும் கைநிறைய தருவேன்
அடித்தால் சிரிப்பேனே என் அழகு பூங்கிளியே -அந்த
ஆசை என்னை மீறி உன்மேல் ஆவல் கொள்ளுதடி
உன்னை ஒருநாளும் நான் உறவாய் நினைக்கவில்லை -அட
தென்னை மரம் போல நீயும் தெருவினில் நிற்பாயடா
உயர்ந்த மரமானால் உனக்கு உத்தரம் நானாவேன் -நன்கு
மலர்ந்த பூங்கொடியே இந்த மாமன் முகம் பாரடி
சொந்தம் என்று சொல்லி எனோ சுற்றி வருகின்றாய் -உனது
மந்த புத்தியிலே உந்தன் மனமும் குழம்புகிறாய்
எலியும் பூனையென இருந்தோம் சிலகாலம் -ஆனால்
இனிமேல் இருவருக்கும் இருக்கு எதிர்காலம்
விட்டுப் பிரிய மனம் விஷமாய் மாறுதடி
கொட்டி அளப்பதென்ன நீ யொரு கொடிய நோயாளி -என்னை
கிட்டே நெருங்கி வந்தால் உனக்கு கிடைக்கும் மரியாதை
வானத்தையும் அளந்து சீர்வரிசை தந்திடுவேன் -அடி
கான கருங் குயிலே கொஞ்சம் கருணை செய்திடடி
என்ன நினைத்து நீயும் என்னிடம் ஏங்கி சிரிக்கின்றாய் -உன்
கன்னம் சிவப்பதற்கு நானும் கைநிறைய தருவேன்
அடித்தால் சிரிப்பேனே என் அழகு பூங்கிளியே -அந்த
ஆசை என்னை மீறி உன்மேல் ஆவல் கொள்ளுதடி
உன்னை ஒருநாளும் நான் உறவாய் நினைக்கவில்லை -அட
தென்னை மரம் போல நீயும் தெருவினில் நிற்பாயடா
உயர்ந்த மரமானால் உனக்கு உத்தரம் நானாவேன் -நன்கு
மலர்ந்த பூங்கொடியே இந்த மாமன் முகம் பாரடி
சொந்தம் என்று சொல்லி எனோ சுற்றி வருகின்றாய் -உனது
மந்த புத்தியிலே உந்தன் மனமும் குழம்புகிறாய்
எலியும் பூனையென இருந்தோம் சிலகாலம் -ஆனால்
இனிமேல் இருவருக்கும் இருக்கு எதிர்காலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக