வியாழன், 19 ஏப்ரல், 2018

காலம் 365

தன்னைப்   போல   உலகிலே -நல்ல
தர்மம்   காத்து    நிலைக்கவே
பெண்ணைப்    படைத்தார்  இறைவனே -இனியாகிலும்
பெண்களை    போற்றுக   ஆண்களே

வாயை    வைத்துப்    பிழைப்பதும் -வீணில்
வறட்டு    ஜம்பம்    கொள்வதும்
நாயைப்    போலவே    அலைவதும் -இங்கு
நல்லவர்    செய்திடும்     செயலாமோ

மனைவி    தவிர    மற்றதை -நம்
மனதில்    நினைப்பது    தவரன்றோ
குணத்தை    இழந்து    வாழ்வதோ -பல
குடும்பங்கள்   அழிந்து    போவதோ

அன்பு    காட்டு   பிறரிடம் -நீயும்
அள்ளிக்    கொடு   ஏழைக்கு
பண்பு    பெருகியே  வளரனும் -நம்ம
பாரதம்    உயர்ந்து    செழிக்கனும்

பெண்ணை    வைத்துப்    பிழைப்பவர் -பிறரிடம்
பேதம்    பெருக்கி    வாழ்பவர்
கண்கள்    இருந்தும்    குருடரே -அவர்க்கு
காலம்   வழங்குமே    நல்ல தண்டணை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக