தன்னைப் போல உலகிலே -நல்ல
தர்மம் காத்து நிலைக்கவே
பெண்ணைப் படைத்தார் இறைவனே -இனியாகிலும்
பெண்களை போற்றுக ஆண்களே
வாயை வைத்துப் பிழைப்பதும் -வீணில்
வறட்டு ஜம்பம் கொள்வதும்
நாயைப் போலவே அலைவதும் -இங்கு
நல்லவர் செய்திடும் செயலாமோ
மனைவி தவிர மற்றதை -நம்
மனதில் நினைப்பது தவரன்றோ
குணத்தை இழந்து வாழ்வதோ -பல
குடும்பங்கள் அழிந்து போவதோ
அன்பு காட்டு பிறரிடம் -நீயும்
அள்ளிக் கொடு ஏழைக்கு
பண்பு பெருகியே வளரனும் -நம்ம
பாரதம் உயர்ந்து செழிக்கனும்
பெண்ணை வைத்துப் பிழைப்பவர் -பிறரிடம்
பேதம் பெருக்கி வாழ்பவர்
கண்கள் இருந்தும் குருடரே -அவர்க்கு
காலம் வழங்குமே நல்ல தண்டணை
தர்மம் காத்து நிலைக்கவே
பெண்ணைப் படைத்தார் இறைவனே -இனியாகிலும்
பெண்களை போற்றுக ஆண்களே
வாயை வைத்துப் பிழைப்பதும் -வீணில்
வறட்டு ஜம்பம் கொள்வதும்
நாயைப் போலவே அலைவதும் -இங்கு
நல்லவர் செய்திடும் செயலாமோ
மனைவி தவிர மற்றதை -நம்
மனதில் நினைப்பது தவரன்றோ
குணத்தை இழந்து வாழ்வதோ -பல
குடும்பங்கள் அழிந்து போவதோ
அன்பு காட்டு பிறரிடம் -நீயும்
அள்ளிக் கொடு ஏழைக்கு
பண்பு பெருகியே வளரனும் -நம்ம
பாரதம் உயர்ந்து செழிக்கனும்
பெண்ணை வைத்துப் பிழைப்பவர் -பிறரிடம்
பேதம் பெருக்கி வாழ்பவர்
கண்கள் இருந்தும் குருடரே -அவர்க்கு
காலம் வழங்குமே நல்ல தண்டணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக