ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கற்பகத தரு 392

  கண்ணில்  ஒளி தரும்
  கரு மணி  நீயே
கவிதையில்  வாழ்ந்திடும்
கற்பகத  தருவே

 என்னில்  இயங்கும்
இயற்கையும்  நீயே
என்றும்  தொழுவேன்
இனியும்  உனையே

 மின்னல்  மேகம்
மெய்ப்  பொருள் நீயே
மேலோர் போற்றும்
நூலகம்  நீயே

கன்னல்  தமிழால்
கனிந்திடும்  திருவே
இன்னல் தீர்த்திடும்
ஈகைக்  குணமே

தவறினை  நீக்கிடும்
தர்மத்  தேவதை
தாளிணைப்  பணிவோர்
தகுதியில்  உயர்வார்

பொன்னில்  மணியே
புது மலர்த் தேனே
பூவையர்  போற்றிடும்
பூபாள  ராகமே

நாளும்  வணங்கிட
நன்மைகள்  கிடைக்கும்
நல்லவர்  ஆகிடில்
நாடே  செழிக்கும்

ஏடும்  கவியும்
என்றுமே  போற்றும்
ஈசனின்  மனமோ
இறைவியை  நினைக்கும்

இயன்றவர்  தருவார்
ஏழைகள்  உயர்வார்
ஏழுதுவேன்  கவிதை
இதுவுமவள்  சரிதை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக