கண்ணில் ஒளி தரும்
கரு மணி நீயே
கவிதையில் வாழ்ந்திடும்
கற்பகத தருவே
என்னில் இயங்கும்
இயற்கையும் நீயே
என்றும் தொழுவேன்
இனியும் உனையே
மின்னல் மேகம்
மெய்ப் பொருள் நீயே
மேலோர் போற்றும்
நூலகம் நீயே
கன்னல் தமிழால்
கனிந்திடும் திருவே
இன்னல் தீர்த்திடும்
ஈகைக் குணமே
தவறினை நீக்கிடும்
தர்மத் தேவதை
தாளிணைப் பணிவோர்
தகுதியில் உயர்வார்
பொன்னில் மணியே
புது மலர்த் தேனே
பூவையர் போற்றிடும்
பூபாள ராகமே
நாளும் வணங்கிட
நன்மைகள் கிடைக்கும்
நல்லவர் ஆகிடில்
நாடே செழிக்கும்
ஏடும் கவியும்
என்றுமே போற்றும்
ஈசனின் மனமோ
இறைவியை நினைக்கும்
இயன்றவர் தருவார்
ஏழைகள் உயர்வார்
ஏழுதுவேன் கவிதை
இதுவுமவள் சரிதை
கரு மணி நீயே
கவிதையில் வாழ்ந்திடும்
கற்பகத தருவே
என்னில் இயங்கும்
இயற்கையும் நீயே
என்றும் தொழுவேன்
இனியும் உனையே
மின்னல் மேகம்
மெய்ப் பொருள் நீயே
மேலோர் போற்றும்
நூலகம் நீயே
கன்னல் தமிழால்
கனிந்திடும் திருவே
இன்னல் தீர்த்திடும்
ஈகைக் குணமே
தவறினை நீக்கிடும்
தர்மத் தேவதை
தாளிணைப் பணிவோர்
தகுதியில் உயர்வார்
பொன்னில் மணியே
புது மலர்த் தேனே
பூவையர் போற்றிடும்
பூபாள ராகமே
நாளும் வணங்கிட
நன்மைகள் கிடைக்கும்
நல்லவர் ஆகிடில்
நாடே செழிக்கும்
ஏடும் கவியும்
என்றுமே போற்றும்
ஈசனின் மனமோ
இறைவியை நினைக்கும்
இயன்றவர் தருவார்
ஏழைகள் உயர்வார்
ஏழுதுவேன் கவிதை
இதுவுமவள் சரிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக