இறைவன் முருகன் வருவாரா -மனதில்
இந்த ஏழைக்கோர் இடம் தருவாரா
கரையில் மோதும் அலையானேன் -அவரது
காதலில் உருகிடும் மெழுகானேன்
அல்லும் பகலும் நினைக்கின்றேன் -அவரை
அடியாள் மனதில் தொழுகின்றேன்
கொல்லும் இரவையும் வெறுக்கின்றேன் -அந்த
கோல முகத்தினை ரசிக்கின்றேன்
மயில் மீதில் ஏறியே வருவாரென்றே -என்
மனதில் ஆசைகள் வைத்துள்ளேன்
குயிலின் பாட்டும் பிடிக்கவில்லை -எனது
குறையை தீர்த்திட வருவாரா
உணவும் எனக்கு ருசிக்கவில்லை -உள்ள
உறவும் எனக்கேனோ இனிக்கவில்லை
கனவில் வந்திட்ட திரு முருகன் -எந்தன்
கரங்கள் பற்றிட வருவாரா
மயில்கள் ஆடிடும் சோலைதனில் -இள
மங்கை நானும் இருப்பேனே
உயிரில் கலந்த செந்தில் வேலன் -இன்றே
உகந்த பதிலினைத் தருவாரா
இந்த ஏழைக்கோர் இடம் தருவாரா
கரையில் மோதும் அலையானேன் -அவரது
காதலில் உருகிடும் மெழுகானேன்
அல்லும் பகலும் நினைக்கின்றேன் -அவரை
அடியாள் மனதில் தொழுகின்றேன்
கொல்லும் இரவையும் வெறுக்கின்றேன் -அந்த
கோல முகத்தினை ரசிக்கின்றேன்
மயில் மீதில் ஏறியே வருவாரென்றே -என்
மனதில் ஆசைகள் வைத்துள்ளேன்
குயிலின் பாட்டும் பிடிக்கவில்லை -எனது
குறையை தீர்த்திட வருவாரா
உணவும் எனக்கு ருசிக்கவில்லை -உள்ள
உறவும் எனக்கேனோ இனிக்கவில்லை
கனவில் வந்திட்ட திரு முருகன் -எந்தன்
கரங்கள் பற்றிட வருவாரா
மயில்கள் ஆடிடும் சோலைதனில் -இள
மங்கை நானும் இருப்பேனே
உயிரில் கலந்த செந்தில் வேலன் -இன்றே
உகந்த பதிலினைத் தருவாரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக