வியாழன், 19 ஏப்ரல், 2018

காந்தி 364

கையைப்    புடிச்சு    இழுக்கிறான் -அவன்
ரொம்ப    கணக்காகவே   நடிக்கிறான்
பையப்    பைய வே    பேசுறான் -அந்த
பாவி     ஏன்தான்   பிறக்கிறான்

பெண்களை    பேசியே    வளைக்கிறான் -அவளை
பின்னப்    படுத்திப்    பாக்கிறான்
கண்களைக்  குத்தியே   ரசிக்கிறான் -அந்த
கயவன்    ஏன்  இன்னும்   இருக்கிறான்

ஊரை   ஏச்சியே   பிழைக்கிறான் -தனது
உறவைத்    தள்ளியே   வைக்கிறான்
பேரைக்    கெடுத்துக்    கொள்கிறான் -மண்ணில்
பித்தன்    போலவே    வாழ்கிறான்

ஆடும்    ஆட்டம்   சரியில்லையே -எனோ
அவனும்    இன்னமும்    திருந்தல்லியே
வீடும்    செல்வமும்    நிலையில்லையே -இந்த
விவரம்   ஒன்றுமே    புரியல்லியே

மனிதனாக    மண்ணில்    வாழ்பவர் -நல்ல
மகான்     போலவே    ஆகலாம்
புனிதர்   காந்தி  யன்று   சொன்னதை -நாம
பொன்னைப்   போலவே    காக்கணும்

கயமை    எண்ணமோ    வளருது -எங்கும்
கற்பழிப்பு     இன்றும்    தொடருது
பயல்க (ள் )திட்டம்     நடக்குது -இறைவா
பார்த்து    நீங்க தான்    முடிக்கணும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக