அங்கு மிங்கும் அலைந்து திரிந்தேன் -மன
அமைதி நாடி நித்தமும் வெந்தேன்
மங்கை உனையே வழியினில் கண்டேன் -அன்றே
மையல் அதிகம் நானும் கொண்டேன்
நிழலைப் போல நான் பின்னால் நடந்தேன் -நீ
நினைவில் எதனையும் கொள்ளவில்லை
பழகிட நினைத்த என்னை எனோ -தினம்
பார்த்ததும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை
அன்பை தேடியே அலைந்த எனக்கு -நீயும் -
அமுதம் ஊறும் இடமல்லவா
பண்பு காட்டியே பழகிடுவாயே -இந்த
பாவிக்கு நல்லின்பம் தந்திடுவாயே
வானம் வந்தெனை வழி மறித்தாலும் -இங்கு
வம்பு தும்புகள் வளைத்திடும் போதும்
கானக குயிலே உன்னையும் பிரியேன் --நீ
கடிந்து கொண்டால் என் உயிர் துறப்பேன்
ஞாலம் என்பது உள்ளவரை -அதில்
நியாயம் என்றும் வெல்லும் வரை
காலம் முழுதும் உனையே தொடர்வேன் -எந்தன்
காதல் கிளியே என்றும் நான் மறவேன்
அமைதி நாடி நித்தமும் வெந்தேன்
மங்கை உனையே வழியினில் கண்டேன் -அன்றே
மையல் அதிகம் நானும் கொண்டேன்
நிழலைப் போல நான் பின்னால் நடந்தேன் -நீ
நினைவில் எதனையும் கொள்ளவில்லை
பழகிட நினைத்த என்னை எனோ -தினம்
பார்த்ததும் ஏன் ஒன்றும் சொல்லவில்லை
அன்பை தேடியே அலைந்த எனக்கு -நீயும் -
அமுதம் ஊறும் இடமல்லவா
பண்பு காட்டியே பழகிடுவாயே -இந்த
பாவிக்கு நல்லின்பம் தந்திடுவாயே
வானம் வந்தெனை வழி மறித்தாலும் -இங்கு
வம்பு தும்புகள் வளைத்திடும் போதும்
கானக குயிலே உன்னையும் பிரியேன் --நீ
கடிந்து கொண்டால் என் உயிர் துறப்பேன்
ஞாலம் என்பது உள்ளவரை -அதில்
நியாயம் என்றும் வெல்லும் வரை
காலம் முழுதும் உனையே தொடர்வேன் -எந்தன்
காதல் கிளியே என்றும் நான் மறவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக