சித்திரப் பெண் மீனாட்சிக்கு -என்றும்
சித்திரையில் தான் கல்யாணம்
முத்திரை பதித்திட மோகன சுந்தரர் -இன்று
மோகம் தீர்த்திடும் நல்ல முகூர்த்த நாள்
ஆனிப் பொன் மாலை ஆபரணத்தோடு -நம்
ஆவணி வீதியில் வரும் அழகு நாள்
காணிக்கை தந்து கண்ணீர் மல்கிட -அவர்
காலில் விழுந்து மகிழும் நாள்
கூட்டமாய் கூடியே குலவை இடும் நல்ல நாள் -திரு
கோவிலை சுற்றியே கும்மாளம் போடும் திரு நாள்
ஆட்டமும் பாட்டும் ஆளினை அசத்திடும் அன்பு நாள் -நம்ம
அந்திப் பொட்டலில் ஆசையாய் உண்ணும் அழகு நாள்
வைகையில் நீராடி வாசமலர் சூடியே -வரும்
வசந்தத்தை அழைத்திடும் வாச நாள்
வாகை கொண்ட காளையர் கண்டு -தன
வசமிழந்தவர் ஆடிப் பாடிடும் வசந்த நாள்
தமுக்கத் திடலிலே தையலர் சேர்ந்து -எங்கும்
தாவியே ஓடிடும் தங்க நாள்
கமுக்கமான காதல் விவரங்கள் -இங்கு
கண்டவர் அறிந்திடும் காவிய நாள்
சித்திரையில் தான் கல்யாணம்
முத்திரை பதித்திட மோகன சுந்தரர் -இன்று
மோகம் தீர்த்திடும் நல்ல முகூர்த்த நாள்
ஆனிப் பொன் மாலை ஆபரணத்தோடு -நம்
ஆவணி வீதியில் வரும் அழகு நாள்
காணிக்கை தந்து கண்ணீர் மல்கிட -அவர்
காலில் விழுந்து மகிழும் நாள்
கூட்டமாய் கூடியே குலவை இடும் நல்ல நாள் -திரு
கோவிலை சுற்றியே கும்மாளம் போடும் திரு நாள்
ஆட்டமும் பாட்டும் ஆளினை அசத்திடும் அன்பு நாள் -நம்ம
அந்திப் பொட்டலில் ஆசையாய் உண்ணும் அழகு நாள்
வைகையில் நீராடி வாசமலர் சூடியே -வரும்
வசந்தத்தை அழைத்திடும் வாச நாள்
வாகை கொண்ட காளையர் கண்டு -தன
வசமிழந்தவர் ஆடிப் பாடிடும் வசந்த நாள்
தமுக்கத் திடலிலே தையலர் சேர்ந்து -எங்கும்
தாவியே ஓடிடும் தங்க நாள்
கமுக்கமான காதல் விவரங்கள் -இங்கு
கண்டவர் அறிந்திடும் காவிய நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக