வியாழன், 26 ஏப்ரல், 2018

சித்திரைத் திரு விழா 385

சித்திரப் பெண் மீனாட்சிக்கு -என்றும்
சித்திரையில் தான் கல்யாணம்
முத்திரை பதித்திட மோகன சுந்தரர் -இன்று
மோகம் தீர்த்திடும் நல்ல முகூர்த்த   நாள்

ஆனிப் பொன் மாலை ஆபரணத்தோடு -நம்
ஆவணி   வீதியில் வரும்  அழகு   நாள்
காணிக்கை தந்து கண்ணீர்   மல்கிட -அவர்
காலில் விழுந்து மகிழும் நாள்

கூட்டமாய் கூடியே குலவை இடும் நல்ல நாள் -திரு
கோவிலை சுற்றியே கும்மாளம் போடும் திரு நாள்
ஆட்டமும் பாட்டும்  ஆளினை அசத்திடும் அன்பு  நாள் -நம்ம
அந்திப் பொட்டலில் ஆசையாய் உண்ணும் அழகு நாள்

வைகையில்   நீராடி    வாசமலர்    சூடியே -வரும்
வசந்தத்தை   அழைத்திடும் வாச நாள்
வாகை    கொண்ட  காளையர் கண்டு -தன
வசமிழந்தவர்   ஆடிப்   பாடிடும்    வசந்த நாள்

தமுக்கத்    திடலிலே தையலர் சேர்ந்து -எங்கும்
தாவியே    ஓடிடும்    தங்க  நாள்
கமுக்கமான    காதல்    விவரங்கள்  -இங்கு
கண்டவர்    அறிந்திடும்    காவிய நாள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக