வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மாமன் மகன் 347

வாடி   தோழி   வண்தமிழ்  செல்வி -நீ
வாடிப்   போனது   ஏனடி
ஓடியே   வந்தது   என்னடி -என்னிடம்
உண்மையை   சரிவர   சொல்லடி -(தலைவி )

தனியே    நின்றேன்    அம்மா  -தனக்கு
தாகம்    என்றான்    சும்மா
கனியே   கரும்பே    என்றான் -எனது
கன்னத்தில்    முத்தமே   தந்தான்  (தோழி )

அறிவுக்குப்   பஞ்சமா    உனக்கு -இங்கு
அயலான்    கடையில்   நீயும்  சரக்கா
எரியும்    நெருப்பாய்   இருப்பாய் -உடனே
எதிர்த்து    பூசைகள்   கொடுப்பாய்   (தலைவி )

என்னதான்    செய்வேன்    நானும் -இதில்
அவன்    எனது    மாமனின்   மகனே
கன்னி   என்மனசோ   வெள்ளை -அவனது
காதல்   எனக்கு தான்    தொல்லை    (தோழி )

மாமன் மகன்  என்றால்   மட்டும்   சரியா -அவன்
மதி  கெட்டு    நடப்பது    முறையா
காமம்  என்பது   மிகவும்   கொடிது -நாளும்
கவனத்தில்    கொள்ளடி    இனிது    (தலைவி )

பெண்ணெனில்   பலருக்கு   எளிது -அவர்க்கு
பெருமைகள்    தருவது    அரிது
கண்களை    போன்றது    கற்பு -இதனை
கவனத்தில்     கொள்ளடி    இனிது     (தலைவி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக