வாடி தோழி வண்தமிழ் செல்வி -நீ
வாடிப் போனது ஏனடி
ஓடியே வந்தது என்னடி -என்னிடம்
உண்மையை சரிவர சொல்லடி -(தலைவி )
தனியே நின்றேன் அம்மா -தனக்கு
தாகம் என்றான் சும்மா
கனியே கரும்பே என்றான் -எனது
கன்னத்தில் முத்தமே தந்தான் (தோழி )
அறிவுக்குப் பஞ்சமா உனக்கு -இங்கு
அயலான் கடையில் நீயும் சரக்கா
எரியும் நெருப்பாய் இருப்பாய் -உடனே
எதிர்த்து பூசைகள் கொடுப்பாய் (தலைவி )
என்னதான் செய்வேன் நானும் -இதில்
அவன் எனது மாமனின் மகனே
கன்னி என்மனசோ வெள்ளை -அவனது
காதல் எனக்கு தான் தொல்லை (தோழி )
மாமன் மகன் என்றால் மட்டும் சரியா -அவன்
மதி கெட்டு நடப்பது முறையா
காமம் என்பது மிகவும் கொடிது -நாளும்
கவனத்தில் கொள்ளடி இனிது (தலைவி )
பெண்ணெனில் பலருக்கு எளிது -அவர்க்கு
பெருமைகள் தருவது அரிது
கண்களை போன்றது கற்பு -இதனை
கவனத்தில் கொள்ளடி இனிது (தலைவி)
வாடிப் போனது ஏனடி
ஓடியே வந்தது என்னடி -என்னிடம்
உண்மையை சரிவர சொல்லடி -(தலைவி )
தனியே நின்றேன் அம்மா -தனக்கு
தாகம் என்றான் சும்மா
கனியே கரும்பே என்றான் -எனது
கன்னத்தில் முத்தமே தந்தான் (தோழி )
அறிவுக்குப் பஞ்சமா உனக்கு -இங்கு
அயலான் கடையில் நீயும் சரக்கா
எரியும் நெருப்பாய் இருப்பாய் -உடனே
எதிர்த்து பூசைகள் கொடுப்பாய் (தலைவி )
என்னதான் செய்வேன் நானும் -இதில்
அவன் எனது மாமனின் மகனே
கன்னி என்மனசோ வெள்ளை -அவனது
காதல் எனக்கு தான் தொல்லை (தோழி )
மாமன் மகன் என்றால் மட்டும் சரியா -அவன்
மதி கெட்டு நடப்பது முறையா
காமம் என்பது மிகவும் கொடிது -நாளும்
கவனத்தில் கொள்ளடி இனிது (தலைவி )
பெண்ணெனில் பலருக்கு எளிது -அவர்க்கு
பெருமைகள் தருவது அரிது
கண்களை போன்றது கற்பு -இதனை
கவனத்தில் கொள்ளடி இனிது (தலைவி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக