அறிவான தெய்வம் நீதானம்மா -இந்த
அடியேனுக்கு அருள் செய்ய வருவாயம்மா
புரியாத கேள்வியின் விடை- நீயம்மா-பெரும்
புகழ் வேண்டி உன்பாதம் பணிந்தேன் அம்மா
கண்ணாலே நீ பார்க்க நான் கவியாகினேன் -உன்
கனிவான சொல்லே எனது வழிகாட்டியே
எண் ணா லும் எழுத்தாலும் என்னை மாற்றினாய் -இந்த
எளியோனுக் கருள்தந்து புகழ் ஏற்றினாய்
பொன்னாலும் மணியாலும் துதிப்பேன் அம்மா -உனது
புன்னகை பலத்தாலே நானும் ஜெயிப்பேன் அம்மா
மண்ணுள்ள காலம் முழுதும் மருந்தாகினாய் -உந்தன்
மலரடி தொழுதவர்க்கு அறிவு விரிந்தாகினாய்
அழியாத பல செல்வம் நீ தந்தது -உன்
அருளாலே அல்லவா இந்தப் பெயர் வந்தது
விழி சிந்தும் கண்ணீரில் விளக்கேற்றுவேன் --தலை
விதி மாற்றி அருள் கூட்ட உனை வேண்டினேன்
எந்நாளும் உனைஎண்ண மறவேனே -உன்
எழில் கண்டு பல பாடல் புனைவேனே
கண்ணாக உனையெண்ணி தினம் போற்றுவேன் -தமிழ்
கவிதையின் வழியாக உந்தனை வேண்டினேன்
அடியேனுக்கு அருள் செய்ய வருவாயம்மா
புரியாத கேள்வியின் விடை- நீயம்மா-பெரும்
புகழ் வேண்டி உன்பாதம் பணிந்தேன் அம்மா
கண்ணாலே நீ பார்க்க நான் கவியாகினேன் -உன்
கனிவான சொல்லே எனது வழிகாட்டியே
எண் ணா லும் எழுத்தாலும் என்னை மாற்றினாய் -இந்த
எளியோனுக் கருள்தந்து புகழ் ஏற்றினாய்
பொன்னாலும் மணியாலும் துதிப்பேன் அம்மா -உனது
புன்னகை பலத்தாலே நானும் ஜெயிப்பேன் அம்மா
மண்ணுள்ள காலம் முழுதும் மருந்தாகினாய் -உந்தன்
மலரடி தொழுதவர்க்கு அறிவு விரிந்தாகினாய்
அழியாத பல செல்வம் நீ தந்தது -உன்
அருளாலே அல்லவா இந்தப் பெயர் வந்தது
விழி சிந்தும் கண்ணீரில் விளக்கேற்றுவேன் --தலை
விதி மாற்றி அருள் கூட்ட உனை வேண்டினேன்
எந்நாளும் உனைஎண்ண மறவேனே -உன்
எழில் கண்டு பல பாடல் புனைவேனே
கண்ணாக உனையெண்ணி தினம் போற்றுவேன் -தமிழ்
கவிதையின் வழியாக உந்தனை வேண்டினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக