அம்மா என்று நாம் அழைக்கயிலே -புதிய
ஆனந்தம் பொங்கி வழியுமம்மா
சும்மா கிடந்த்திட்ட மனதினிலே -நல்ல
சுகமும் பலமும் கூடுதம்மா
உதிரம் தன்னையே பாலாக்கி -தினம்
உயிரை வளர்த்தவள் தாயல்லவா
புதிர்கள் நிறைந்திட்ட இந்தப் பூமியிலே -நமக்கு
பொறுமை அன்பு உரைத்தவளே
ஊட்டி நம்மையும் வார்த்தாளே -தன
உயிரையும் நமக்கெனத் தருவாளே
கேட்டிட்ட நீதிகள் மறந்தோமே -வீணாய்
கேடு மதியாலே எதற்கோ அலைந்தோமே
தனக்கென என்றைக்கும் வாழாமல் -வெறும்
தலைக்கனம் கொண்டே ஆடாமல்
பிறர்க்கென வாழ்தல் பெருமையன்றோ -இதனை
பேணியே காப்பதும் நம் கடமையன்றோ
உலகம் என்பது இங்கு உள்ளவரை -அதில்
உயிர்கள் வாழ்வது என்னும் வரை
நன்றி நிறைந்திட நாம் இருப்போம் -ஒவ்வொரு
நாளுமே நம் தாய்தனை வணங்கிடுவோம்
ஆனந்தம் பொங்கி வழியுமம்மா
சும்மா கிடந்த்திட்ட மனதினிலே -நல்ல
சுகமும் பலமும் கூடுதம்மா
உதிரம் தன்னையே பாலாக்கி -தினம்
உயிரை வளர்த்தவள் தாயல்லவா
புதிர்கள் நிறைந்திட்ட இந்தப் பூமியிலே -நமக்கு
பொறுமை அன்பு உரைத்தவளே
ஊட்டி நம்மையும் வார்த்தாளே -தன
உயிரையும் நமக்கெனத் தருவாளே
கேட்டிட்ட நீதிகள் மறந்தோமே -வீணாய்
கேடு மதியாலே எதற்கோ அலைந்தோமே
தனக்கென என்றைக்கும் வாழாமல் -வெறும்
தலைக்கனம் கொண்டே ஆடாமல்
பிறர்க்கென வாழ்தல் பெருமையன்றோ -இதனை
பேணியே காப்பதும் நம் கடமையன்றோ
உலகம் என்பது இங்கு உள்ளவரை -அதில்
உயிர்கள் வாழ்வது என்னும் வரை
நன்றி நிறைந்திட நாம் இருப்போம் -ஒவ்வொரு
நாளுமே நம் தாய்தனை வணங்கிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக