சனி, 7 ஏப்ரல், 2018

அன்னை 334

அம்மா  என்று  நாம்   அழைக்கயிலே -புதிய
ஆனந்தம்  பொங்கி  வழியுமம்மா
சும்மா  கிடந்த்திட்ட  மனதினிலே -நல்ல
சுகமும்   பலமும்   கூடுதம்மா

உதிரம்   தன்னையே   பாலாக்கி  -தினம்
உயிரை    வளர்த்தவள்   தாயல்லவா
புதிர்கள்   நிறைந்திட்ட  இந்தப்  பூமியிலே -நமக்கு
பொறுமை   அன்பு  உரைத்தவளே

ஊட்டி    நம்மையும்  வார்த்தாளே -தன
உயிரையும்   நமக்கெனத்  தருவாளே
கேட்டிட்ட  நீதிகள்   மறந்தோமே -வீணாய்
கேடு மதியாலே  எதற்கோ  அலைந்தோமே

தனக்கென  என்றைக்கும்  வாழாமல் -வெறும்
தலைக்கனம்   கொண்டே    ஆடாமல்
பிறர்க்கென   வாழ்தல்   பெருமையன்றோ -இதனை
பேணியே   காப்பதும்  நம் கடமையன்றோ

உலகம்  என்பது   இங்கு  உள்ளவரை -அதில்
உயிர்கள்   வாழ்வது   என்னும் வரை
நன்றி   நிறைந்திட   நாம்  இருப்போம் -ஒவ்வொரு
நாளுமே    நம் தாய்தனை  வணங்கிடுவோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக