மீனே மீனே மீனம்மா -உனது
மேனி மணக்குது என்னம்மா
தானே வந்தால் சரியம்மா -இனி
தழுவிக் கொண்டால் என்னம்மா
போய்யா போய்யா தெரியாதா -உன்
பொழப்பு என்னன்னு புரியாதா
காரியம் ஆகவே கால் பிடிப்பாய் -பின்
கழுத்தை அறுத்திட நீ துடிப்பாய்
தப்பாக எதுவும் நினைக்காதே -உன்னை
தாரம் கொள்வேன் மறுக்காதே
அப்பாவி என்பதும் நான் தானே -நாளும்
அடங்கி கிடப்பேன் பொன்மானே
எல்லாப் பெண்ணையும் ஏமாற்றி -நீ
இருப்பாய் பல நாள் உன்னை மாற்றி
கல்லால் அடித்தால் போதாது -உன்னை
கழுவினில் ஏற்றிட வேண்டாமா
கண்ணுக்கு கண்ணாய் நீ இருப்பாய் -உன்
காலடி பொன்மலை நான் குவிப்பேன்
இன்னும் சொல்வது புரியலையா -நான்
ஏங்கித் தவிப்பது தெரியலையா
பொன்னும் பொருளும் யார் கேட்டார் -உன்
பொறுக்கும் புத்தியை விட்டு விடு
என் கண்ணில் படாமல் ஒளிந்துவிடு -என்
காலணி பேசும் ஓடிவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக