சனி, 7 ஏப்ரல், 2018

பொன்மலை 333

மீனே  மீனே   மீனம்மா -உனது
மேனி   மணக்குது  என்னம்மா 
தானே  வந்தால்   சரியம்மா -இனி 
தழுவிக்  கொண்டால்  என்னம்மா 

போய்யா  போய்யா  தெரியாதா -உன் 
பொழப்பு  என்னன்னு  புரியாதா 
காரியம்  ஆகவே   கால்   பிடிப்பாய் -பின் 
கழுத்தை  அறுத்திட   நீ துடிப்பாய் 

தப்பாக   எதுவும்   நினைக்காதே -உன்னை 
தாரம்   கொள்வேன்   மறுக்காதே 
அப்பாவி  என்பதும்  நான்  தானே -நாளும் 
அடங்கி   கிடப்பேன்  பொன்மானே 

எல்லாப்  பெண்ணையும்  ஏமாற்றி  -நீ 
இருப்பாய்  பல நாள்  உன்னை மாற்றி 
கல்லால்  அடித்தால்  போதாது -உன்னை 
கழுவினில்  ஏற்றிட  வேண்டாமா 
கண்ணுக்கு  கண்ணாய்  நீ   இருப்பாய் -உன் 
காலடி   பொன்மலை   நான் குவிப்பேன் 
இன்னும்  சொல்வது   புரியலையா -நான் 
ஏங்கித்  தவிப்பது   தெரியலையா 

பொன்னும்  பொருளும்   யார்  கேட்டார் -உன் 
பொறுக்கும்  புத்தியை   விட்டு விடு 
என் கண்ணில்  படாமல்  ஒளிந்துவிடு -என் 
காலணி   பேசும்  ஓடிவிடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக