உழைத்தே உயர்ந்தாய் உலகிலே -நான்
உய்ய வழி சொன்ன நல்லவரே
களைத்துப் போன மனிதருக்கு -வாழ்வில்
கலங்கரை விளக்காய் திகழ்ந்தவரே (உழைத்து )
நல்ல வழியினில் தினம் நடந்தவரே -பிறர்க்கு
நன்மை ஒன்றையே செய்தவரே
பிள்ளைகள் வளர்த்திட நீர் பட்ட பெரும் பாடு -அதை
புரிந்து கொண்டவன் எழுதும் தனிப் பாடல் (உழைத்து )
கேடுகள் செய்த மனிதர் பலர் --ஐயா
உம்முன் கெட்டழிந்து போன கதையுமுண்டு
மறதி என்பது மனதில் வந்தாலும் --உன்னை
மறந்திட முடியாத வரமும் பெற்றாய் (உழைத்து )
தமிழால் பாடி நானும் பூசை செய்வேன் -எனது
தந்தையே உன்னை என்றும் நான் மறவேன்
உயிரைக் கொடுத்து என்னையும் உலவ விட்டாய் --என்
ஊனில் உயிரில் நன்றாய் கலந்து விட்டாய் (உழைத்து )
வாழ்வு முறைகள் ஒரு நாள் மாறி விடும் --இங்கு
வற்றாத நதி கூட எனோ வறண்டு விடும்
தாயை தந்தையை இங்கே யார் மறப்பார் --மறந்தால்
தர்மம் தண்டனை கொடுத்து விடும் (உழைத்து)
உய்ய வழி சொன்ன நல்லவரே
களைத்துப் போன மனிதருக்கு -வாழ்வில்
கலங்கரை விளக்காய் திகழ்ந்தவரே (உழைத்து )
நல்ல வழியினில் தினம் நடந்தவரே -பிறர்க்கு
நன்மை ஒன்றையே செய்தவரே
பிள்ளைகள் வளர்த்திட நீர் பட்ட பெரும் பாடு -அதை
புரிந்து கொண்டவன் எழுதும் தனிப் பாடல் (உழைத்து )
கேடுகள் செய்த மனிதர் பலர் --ஐயா
உம்முன் கெட்டழிந்து போன கதையுமுண்டு
மறதி என்பது மனதில் வந்தாலும் --உன்னை
மறந்திட முடியாத வரமும் பெற்றாய் (உழைத்து )
தமிழால் பாடி நானும் பூசை செய்வேன் -எனது
தந்தையே உன்னை என்றும் நான் மறவேன்
உயிரைக் கொடுத்து என்னையும் உலவ விட்டாய் --என்
ஊனில் உயிரில் நன்றாய் கலந்து விட்டாய் (உழைத்து )
வாழ்வு முறைகள் ஒரு நாள் மாறி விடும் --இங்கு
வற்றாத நதி கூட எனோ வறண்டு விடும்
தாயை தந்தையை இங்கே யார் மறப்பார் --மறந்தால்
தர்மம் தண்டனை கொடுத்து விடும் (உழைத்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக