திங்கள், 30 ஏப்ரல், 2018

தந்தை 397

உழைத்தே உயர்ந்தாய்  உலகிலே -நான்
உய்ய வழி  சொன்ன  நல்லவரே
களைத்துப்  போன  மனிதருக்கு -வாழ்வில்
கலங்கரை  விளக்காய்  திகழ்ந்தவரே (உழைத்து )

நல்ல  வழியினில்  தினம்  நடந்தவரே -பிறர்க்கு
நன்மை  ஒன்றையே   செய்தவரே
பிள்ளைகள்  வளர்த்திட நீர்  பட்ட  பெரும் பாடு -அதை
புரிந்து  கொண்டவன்  எழுதும்  தனிப் பாடல் (உழைத்து )

கேடுகள்  செய்த  மனிதர்  பலர் --ஐயா
உம்முன்  கெட்டழிந்து போன கதையுமுண்டு
மறதி  என்பது  மனதில்  வந்தாலும் --உன்னை
மறந்திட  முடியாத   வரமும்  பெற்றாய் (உழைத்து )

தமிழால்  பாடி நானும்  பூசை  செய்வேன் -எனது
தந்தையே  உன்னை  என்றும்  நான்  மறவேன்
உயிரைக்  கொடுத்து  என்னையும்  உலவ விட்டாய் --என்
ஊனில்   உயிரில்  நன்றாய்  கலந்து  விட்டாய் (உழைத்து )

வாழ்வு  முறைகள்  ஒரு நாள்  மாறி விடும் --இங்கு
வற்றாத  நதி கூட  எனோ  வறண்டு  விடும்
தாயை  தந்தையை  இங்கே  யார்  மறப்பார் --மறந்தால்
தர்மம்   தண்டனை  கொடுத்து  விடும் (உழைத்து) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக