செந்தமிழ் நாட்டு இளம் சிறுவர்களே -எங்கும்
சிட்டாய் பறக்கும் சிறுமிகளே
பைந்தமிழ் நாடு நம் வீடு -இது
பாரத தேசத்தில் ஒரு கூடு
சூதும் வாதும் வேதனையே -நீ
சுகம் பெற உழைத்தால் சாதனையே
யாதும் உறவெனக் கொள்வீரே -இது
ஆன்ற நல்வழி அறிவீரே
காலையில் எழுவீர் சீக்கிரமாய் -உள்ள
கடமையை முடிப்பீர் நிச்சயமாய்
மாலையில் கொஞ்சம் விளையாட்டு -பிறர்
அன்பால் தாலாட்டு
பெற்றோரை பணிதல் நம் கடமை -அதனை
பேணி காப்பது நம் உடமை
கற்றதை வாழ்வினில் கடைபிடிப்பாய் -கல்வி
கற்று தந்தவரை நீ மதிப்பாய்
உயிர்களை அன்பால் வளைத்துவிடு -என்றும்
உண்மை ஒன்றையே பேசிவிடு
வயலினில் இறங்கியே உழைத்து விடு -நாட்டில்
வறுமை என்பதை ஒழித்துவிடு
உனக்கென முதலிடம் தனைத் தேடு -அது
உதவிடும் என்றுமே முதலீடு
தனக்கென எதையும் பதுக்காதே -பெரியோர்
சொல்வதை எப்போதும் ஒதுக்காதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக