செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஏற்றம் 339

வாடி   பொன்னே   வாயாடி -இன்று
உன்னை   வலைச்சு   போட்டா   என்னாடி (அவன்)

கேடியைப்   போலவே   பேசாதே  -உனது
கெட்ட  புத்தியைக்    காட்டாதே =(அவள் )

ஊரை   அடிச்சுமே   உலை   வைப்பேன் -உன்னை
என் உச்சந் தலையினில்   சிறை   வைப்பேன் (அவன் )

பேரைக்   கெடுக்கப்   பாக்குறயே  -உன்
பெருமையை   யள்ளியே    வீசறாயே  (அவள்) 

பொய்யும்  புரட்டுமே   எனக்காச்சு -நல்ல
புத்தி   என்பதும்    கிடையாது (அவன் )

திருந்தி    வாழ்ந்திடக்   கத்துக்கணும்  நீ
தீயவை   யனைத்தையும்  விட்டுடனும் (அவள்)

திருத்திட   வாடியென்   செல்லப்  புள்ளெ -அதுவே
திரு நாள்   எனக்கென்று   சொல்லு புள்ளெ (அவன்)

இருக்கிற   வேலைகள்   போதாதா -என்னை
இழுக்கிற   வேலையும்   கூடாது  (அவள்)

உனக்கென   மாறுவேன்   உத்தமனாய் -இனி
உன்னடி     தொழுவேன்   சத்தியமாய் (அவன்)

காதல்   என்பது   மாற்றம்  தரும் -அதில்
கலந்தவர்   வாழ்க்கை யில்   ஏற்றம்   வரும்  (இருவரும் )






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக