தென்னாடுடைய சிவனே போற்றி -என்
நாவில் உறையும் இறைவா போற்றி
கண்ணே மணியே கயிலைப் பதியே -உன்
காலடி பணிந்தோம் காத்தருள் இனியே (தென்னாடு )
மங்கை கங்கையை தலைமுடியினில் வைத்தாய் -திரு
மாலவன் தங்கையை மணமாய் முடித்தாய்
பொங்கிடும் நிலவையும் பூரணம் கொண்டாய் -கொடும்
புலியின் தோலினைப் புறத்தில் அணிந்தாய் (தென்னாடு )
புட்டுக்காக அன்று நீ பிரம்படி பட்டாய் --சீறிப்
பொங்கிட வைகையில் புதுப் புனல் தந்தாய்
சங்கம் வைத்தே தமிழினை க் காத்தாய் -மகன்
சரவணனிடமே சீடனாகி பிரணவம் கற்றாய் (தென்னாடு)
மீன் கொடி பறக்கும் மீனாட்சி நகரில் -இள
மான் , மழு வேந்திய எங்கள் மாதொரு பாகா
நானுனைத் தொழுதேன் நலம் பெற விழைந்தேன் -தெய்வ
நாயகி பார்வதி நலம் தரும் சீலா (தென்னாடு)
சிவமயம் சொல்லிட பயமினி இல்லையே -நம்
சிவனை மறந்தவர் வாழ்வினில் தொல்லையே
இக பர சுகம் பெற என்றுமே நினைப்போம் -அந்த
இறையருள் பெருகினால் நம் இந்தியா செழிக்குமே (தென்னாடு)
நாவில் உறையும் இறைவா போற்றி
கண்ணே மணியே கயிலைப் பதியே -உன்
காலடி பணிந்தோம் காத்தருள் இனியே (தென்னாடு )
மங்கை கங்கையை தலைமுடியினில் வைத்தாய் -திரு
மாலவன் தங்கையை மணமாய் முடித்தாய்
பொங்கிடும் நிலவையும் பூரணம் கொண்டாய் -கொடும்
புலியின் தோலினைப் புறத்தில் அணிந்தாய் (தென்னாடு )
புட்டுக்காக அன்று நீ பிரம்படி பட்டாய் --சீறிப்
பொங்கிட வைகையில் புதுப் புனல் தந்தாய்
சங்கம் வைத்தே தமிழினை க் காத்தாய் -மகன்
சரவணனிடமே சீடனாகி பிரணவம் கற்றாய் (தென்னாடு)
மீன் கொடி பறக்கும் மீனாட்சி நகரில் -இள
மான் , மழு வேந்திய எங்கள் மாதொரு பாகா
நானுனைத் தொழுதேன் நலம் பெற விழைந்தேன் -தெய்வ
நாயகி பார்வதி நலம் தரும் சீலா (தென்னாடு)
சிவமயம் சொல்லிட பயமினி இல்லையே -நம்
சிவனை மறந்தவர் வாழ்வினில் தொல்லையே
இக பர சுகம் பெற என்றுமே நினைப்போம் -அந்த
இறையருள் பெருகினால் நம் இந்தியா செழிக்குமே (தென்னாடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக