ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சிவன் 394

 தென்னாடுடைய  சிவனே  போற்றி -என்
நாவில்  உறையும்  இறைவா  போற்றி
கண்ணே மணியே  கயிலைப்  பதியே -உன்
காலடி  பணிந்தோம்  காத்தருள்  இனியே  (தென்னாடு )

மங்கை  கங்கையை  தலைமுடியினில்  வைத்தாய் -திரு
மாலவன்  தங்கையை  மணமாய்  முடித்தாய்
பொங்கிடும்  நிலவையும்  பூரணம்  கொண்டாய் -கொடும்
புலியின்  தோலினைப்  புறத்தில்  அணிந்தாய்  (தென்னாடு )

புட்டுக்காக  அன்று நீ  பிரம்படி  பட்டாய் --சீறிப்
பொங்கிட வைகையில்  புதுப் புனல்  தந்தாய்
சங்கம்  வைத்தே தமிழினை க்  காத்தாய் -மகன்
சரவணனிடமே  சீடனாகி  பிரணவம்  கற்றாய்  (தென்னாடு)

மீன் கொடி  பறக்கும்  மீனாட்சி  நகரில் -இள
மான் , மழு  வேந்திய   எங்கள்  மாதொரு  பாகா
நானுனைத்   தொழுதேன்  நலம் பெற  விழைந்தேன் -தெய்வ
நாயகி  பார்வதி  நலம் தரும்  சீலா  (தென்னாடு)

சிவமயம்  சொல்லிட  பயமினி  இல்லையே -நம்
சிவனை  மறந்தவர்  வாழ்வினில்  தொல்லையே
இக  பர  சுகம்  பெற  என்றுமே  நினைப்போம் -அந்த
இறையருள்  பெருகினால்  நம் இந்தியா  செழிக்குமே (தென்னாடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக