வெட்ட வெளியினில் போராடி -வரும்
வியர்வைக் குளத்தில் நீராடி
பட்ட சுகத்தினை மறவேனே -என்
பத்தினி உன்னை நான் வெறுப்பேனோ
அள்ளியே அணைத்திடும் எம்மாமனே -உம்மேல்
ஆசைகள் அதிகமாய் வைச்சேனே
பள்ளியில் படிச்சது தெரியாதா --நான்
பக்கபலம் உனக்கெனப் புரியாதா
ஆசையை நிறையவே நானும் வச்சேன் -உன்னை
அசத்தவே எனக்கும் மீசை வச்சேன்
தின்னவே திகட்டாத புது தேனல்லவா -நித்தம்
தேடியே ஓடிவரும் வண்டல்லவா
பொங்கியே வழியுது தேனாறு -அதிலே
புகுந்து குளிச்சுமே நீ பாரு
சிங்கம் தானய்யா நீஎனக்கு -இந்த
சிறுக்கியும் போடுவாள் மனக்கணக்கு
உடம்பினுள் உசுரு உள்ளவரை -அடி
உன்மனம் தானெனது பள்ளியறை
கரும்பு தின்னவே கூலியாடி -நாளும்
காவல் செய்திடும் வேலியடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக