புதன், 11 ஏப்ரல், 2018

வேலி 342

வெட்ட  வெளியினில்  போராடி -வரும் 
வியர்வைக்  குளத்தில்  நீராடி 
பட்ட   சுகத்தினை  மறவேனே -என் 
பத்தினி  உன்னை நான்  வெறுப்பேனோ 

அள்ளியே  அணைத்திடும்     எம்மாமனே -உம்மேல் 
ஆசைகள்  அதிகமாய்   வைச்சேனே 
பள்ளியில்  படிச்சது  தெரியாதா --நான் 
பக்கபலம்  உனக்கெனப்   புரியாதா 

ஆசையை  நிறையவே   நானும்  வச்சேன் -உன்னை 
அசத்தவே  எனக்கும்  மீசை  வச்சேன் 
தின்னவே  திகட்டாத  புது தேனல்லவா -நித்தம் 
தேடியே   ஓடிவரும்   வண்டல்லவா 

பொங்கியே  வழியுது   தேனாறு -அதிலே 
புகுந்து   குளிச்சுமே   நீ  பாரு 
சிங்கம்   தானய்யா   நீஎனக்கு -இந்த 
சிறுக்கியும்   போடுவாள்  மனக்கணக்கு 

உடம்பினுள்  உசுரு   உள்ளவரை  -அடி 
உன்மனம்  தானெனது   பள்ளியறை 
கரும்பு  தின்னவே   கூலியாடி -நாளும் 
காவல்   செய்திடும்    வேலியடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக