காலமெனும் பெரு வெளியில்
கரைந்தோடும் ஒரு நாளில்
கன்னி மேரி வயிற்றினிலே
கர்த்தர் இயேசு பிறந்தாரே
மாட்டுக் கொட்டடி நடுவினிலே
மைந்தன் இயேசு பிறப்பெடுத்தார்
மண்டலங்கள் போற்றிடவே
மகிமையடன் வளர்த்தாரே
குருட்டு எண்ணம் கொண்டவரோ
கொல்ல தினமும் துடித்தாரே
இருட்டு குகை தனில் வாழ்பவர்கள்
எப்படி நல்வழி பெறுவார்கள்
வம்புக்கு இழுத்து வைதார்கள்
வண்ண நிலவை பழித்தார்கள்
அம்புலி போற்றும் தூயவரை
சிலுவையில் அறைந்து ரசித்தார்கள்
வானம் அழுதது அந்நாளில்
வையகம் துடித்த தந்த வெள்ளியிலே
ஞானம் அளித்திட்ட நாயகனை
நாளும் நினைத்து தொழுதார்கள்
எளிமை அன்பு ஈகைதனை
எல்லா நீதியும் போதித்தார்
வறியவர்க்கு உதவிடும் வழிமுறைகள்
வளர்த்திட அன்பாய் சொன்னாரே
மூன்றாம் நாளும் பிறந்ததுவே
மோகன நிலவாய் உயிர்த்தெழுந்தார்
ஆண்டுகள் கோடி ஆயிடினும்
அண்ணல் இயேசுவை மறவோமே
ஈஸ்டர் திருநாள் '
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக