ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

அண்ணல் இயேசு 323

காலமெனும்  பெரு வெளியில் 
கரைந்தோடும்  ஒரு நாளில் 
கன்னி மேரி   வயிற்றினிலே 
கர்த்தர் இயேசு   பிறந்தாரே 
  
மாட்டுக் கொட்டடி  நடுவினிலே 
மைந்தன்  இயேசு  பிறப்பெடுத்தார் 
மண்டலங்கள்    போற்றிடவே 
மகிமையடன்   வளர்த்தாரே 
 
குருட்டு  எண்ணம்  கொண்டவரோ 
கொல்ல  தினமும்   துடித்தாரே 
இருட்டு  குகை தனில்   வாழ்பவர்கள் 
எப்படி   நல்வழி   பெறுவார்கள் 
 
வம்புக்கு  இழுத்து    வைதார்கள் 
வண்ண  நிலவை  பழித்தார்கள் 
அம்புலி  போற்றும்  தூயவரை 
சிலுவையில்  அறைந்து  ரசித்தார்கள் 

வானம்   அழுதது   அந்நாளில் 
வையகம்  துடித்த தந்த   வெள்ளியிலே 
ஞானம்   அளித்திட்ட   நாயகனை 
நாளும்   நினைத்து   தொழுதார்கள் 

எளிமை   அன்பு   ஈகைதனை 
எல்லா  நீதியும்   போதித்தார் 
வறியவர்க்கு  உதவிடும்  வழிமுறைகள் 
வளர்த்திட  அன்பாய்  சொன்னாரே 

மூன்றாம்   நாளும்  பிறந்ததுவே 
மோகன   நிலவாய்  உயிர்த்தெழுந்தார் 
ஆண்டுகள்   கோடி   ஆயிடினும் 
அண்ணல்  இயேசுவை  மறவோமே  

ஈஸ்டர்  திருநாள் '

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக