அவன்; ஆற்றங்கரை யோரம் -நல்
அவள்; வேலோடும் விழி யானேன் -உன்
அவன்; ஊர் ஓரம் எங்க தோப்பு உண்டு -இன்று
அந்தி படும் நேரம்
காற்றாட வந்தவளே கண்ணம்மா -கொஞ்சம்
கண் திறந்து பாரடி பொன்னம்மா
அவள்; வேலோடும் விழி யானேன் -உன்
விரலாலே சுகம் ஆனேன்
ஆளான நாள் முதலாய் -சின்னையா-நானும்
ஆசை வைச்சேன் உன்மேலே என்னய்யா
அவன்; ஊர் ஓரம் எங்க தோப்பு உண்டு -இன்று
ஒதுங்க லாமா நாம கொஞ்சம்
பேர் சொல்ல பிள்ளை வேண்டும் என்னடி -நீ
பிரியமுன்னா போகலாமே முன்னாடி
அவள்; ஆசை மட்டும் குறைச்சலில்லை -இங்கே
யாரை நம்ப தெரியவில்லை
யாரை நம்ப தெரியவில்லை
மோசம் செய்ஞ்சு போயிடுவே தெரியுமா -நான்
முழுகாமே கர்ப்ப மாவேன் புரியுதா
அவன்; தொட்டா கையை விடவும் மாட்டேன் -என்
அவன்; தொட்டா கையை விடவும் மாட்டேன் -என்
தோகை உன்னை மறக்க மாட்டேன்
பட்டினி போட வேண்டாம் தங்கம்மா -நானும்
பாஞ்சு வந்து காத்திடுவேன் சிங்கமா
இருவரும்; நாம் இருவர் ஒருவர் ஆனோம் -உலகில்
இருவரும்; நாம் இருவர் ஒருவர் ஆனோம் -உலகில்
நல்லபடி சேர்ந்து வாழ்வோம்
தேனும் பாலும் கலந்ததாக ஆனோமே -அந்த
தெய்வம் வந்து காத்தருள வேணுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக