ஞாயிறு, 18 மார்ச், 2018

பனிமழை -315

அடடா    இதுவென்ன
   புதுக்கோலம்
ஆண்டவன்   எழுதிய
  எழிற்கோலம்

இலைகளின்   மேலே
  பனிக்கூட்டம்
இசையுடன்    ஆடுது
   சதிராட்டம்

தெருவினில்   தெரியுது
  மாக்கோலம்
தேன்மழை   பொழியுது
  தினந்தோறும்

சாலைகள்   எங்கிலும்
 பனிமழையே
சரிசெய்தல்   எப்படி
விளங்கலியே

வேலைகள்   முடங்கின
விடுமுறை   தொடங்கின
நாளைய   உலகம்
எங்கணுமோ

(வேறு)
அந்த   நாயகன்
அறிவான்   ரகசியமே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக