வானில் நிலவு -ஒரு
வட்டம் போட்டது
காணும் கண்களில் -பல
கவிதை மலர்ந்தது
காட்டில் பறவைகள் -நல்ல
கானம் இசைத்தன
வீட்டில் மனிதர்கள் -எனோ
விளக்கை ஒளித்தனர்
விலைகள் உயர்ந்தன -எங்கும்
விளைச்சல் குறைந்தது
களைகள் வளர்ந்தன -மண்ணில்
கவலைகள் சூழ்ந்தன
ஊரார் காசினில் உல்லாசம் -தினம்
ஒய்யாரி பலருடன் சல்லாபம்
பணத்தை மலையாய் குவித்தார்கள் -கொடும்
பாவத்தை தலைகளில் சுமந்தார்கள்
பேசியே பொழுதினை கழித்தார்கள் -மக்கள்
பிழைக்கும் வழியை தடுத்தார்கள்
வீசிடும் காற்றை கெடுத்தார்கள் -மனதில்
வெறுப்பை அதிகமாய் வளர்த்தார்கள்
வானம் தருவது மழையாகும் -நல்வழியினை
மறப்பது பெரும் பிழையாகும்
வீணாய் இருப்பது சுமையாகும் -இந்த
விவரம் அறிவது நலமாகும்
வட்டம் போட்டது
காணும் கண்களில் -பல
கவிதை மலர்ந்தது
காட்டில் பறவைகள் -நல்ல
கானம் இசைத்தன
வீட்டில் மனிதர்கள் -எனோ
விளக்கை ஒளித்தனர்
விலைகள் உயர்ந்தன -எங்கும்
விளைச்சல் குறைந்தது
களைகள் வளர்ந்தன -மண்ணில்
கவலைகள் சூழ்ந்தன
ஊரார் காசினில் உல்லாசம் -தினம்
ஒய்யாரி பலருடன் சல்லாபம்
பணத்தை மலையாய் குவித்தார்கள் -கொடும்
பாவத்தை தலைகளில் சுமந்தார்கள்
பேசியே பொழுதினை கழித்தார்கள் -மக்கள்
பிழைக்கும் வழியை தடுத்தார்கள்
வீசிடும் காற்றை கெடுத்தார்கள் -மனதில்
வெறுப்பை அதிகமாய் வளர்த்தார்கள்
வானம் தருவது மழையாகும் -நல்வழியினை
மறப்பது பெரும் பிழையாகும்
வீணாய் இருப்பது சுமையாகும் -இந்த
விவரம் அறிவது நலமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக