நிலவில் என்னவோ உன்முகம் தெரியுது -அடி
உன்னை நினைச்சிடவே எந்தன் மனம் இனிக்குது
கனவிலே தினம் தினம் கலங்க வைக்கிற-ஏனோ
கல்யாணம் என்று சொன்னால் காதம் ஓடுறாய்
பல காலம் உன்னை நினைச்சு பரிதவிக்கிரேன் -உனது
பாதம் தொட்டு பூசை செய்ய நாளும் பாக்குறேன்
சிலையைப்போல உருவமுள்ள சிற்றிடைக்காரி - நீ
சிரிச்சு விட்டால் எஞ்சீவன் போக்கும் சில்மிசக்காரி
அலையை போல ஆடித்தவிக்கும் ஆம்பள மனசு -அதை
ஆட்டிவைத்து ரசிக்க பாக்கும் உன்னிள வயசு
நிலையை நன்கு தெரிஞச போதும் உன்மனம் கல்லு -உன்னால்
நிம்மதியை தொலைச்சு புட்டேன் நீ பதில் சொல்லு
பகல் இரவு தூக்கம் தொலைஞ்சு பரிதவிக்கிறேன் -தினம்
பாய்ந்து தழுவ துடிதுடித்து நானும் மயங்குறேன்
அந்தி வெய்யல் மாலையிலே அலைஞ்சு பாக்கிறேன் -நீ
அகப்படுவாய் என்று எண்ணி ஆலாய் பறக்கிரேன்
செம்பவள இதழை திறந்து சிரிப்பு காட்டடி -அதில்
சிக்கிக்கொண்ட எந்தன் மேலும் கருணை வையடி
அம்புலியை கேட்டாலும் அள்ளித் தருவேன் -ஒரு
அசசாரம் தந்து விட்டால் ஆனந்தம் அடைவேன்
கெஞ்சி கெஞ்சி கேட்டபோதும் மிஞ்சிப் போனவள் -உனது
கெடுமதியை உணராமல் உலகில் கேலிக்கானவன்
வஞ்சி உந்தன் காலடியில் வணங்கி மகிழவேன் -நான்
வாழ மட்டும் வரமும் தந்தால் வல்லமை கொள்ளுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக