செவ்வாய், 27 மார்ச், 2018

வல்லமை 317



நிலவில்   என்னவோ   உன்முகம்  தெரியுது -அடி  
உன்னை   நினைச்சிடவே  எந்தன்  மனம்  இனிக்குது 
கனவிலே  தினம் தினம்  கலங்க வைக்கிற-ஏனோ   
கல்யாணம்  என்று சொன்னால்  காதம்  ஓடுறாய் 

பல காலம்  உன்னை நினைச்சு  பரிதவிக்கிரேன் -உனது  
பாதம்  தொட்டு  பூசை  செய்ய  நாளும்  பாக்குறேன் 
சிலையைப்போல  உருவமுள்ள  சிற்றிடைக்காரி - நீ 
சிரிச்சு  விட்டால்  எஞ்சீவன்  போக்கும்  சில்மிசக்காரி 

அலையை  போல  ஆடித்தவிக்கும்  ஆம்பள  மனசு -அதை 
ஆட்டிவைத்து  ரசிக்க  பாக்கும்  உன்னிள  வயசு 
நிலையை  நன்கு  தெரிஞச போதும்  உன்மனம்  கல்லு -உன்னால் 
நிம்மதியை  தொலைச்சு  புட்டேன்  நீ பதில்  சொல்லு 

பகல் இரவு  தூக்கம்  தொலைஞ்சு  பரிதவிக்கிறேன் -தினம் 
பாய்ந்து  தழுவ  துடிதுடித்து  நானும்  மயங்குறேன் 
அந்தி  வெய்யல்  மாலையிலே   அலைஞ்சு  பாக்கிறேன் -நீ 
அகப்படுவாய்  என்று எண்ணி   ஆலாய்  பறக்கிரேன் 

செம்பவள  இதழை  திறந்து   சிரிப்பு   காட்டடி -அதில் 
சிக்கிக்கொண்ட  எந்தன் மேலும்  கருணை  வையடி
அம்புலியை  கேட்டாலும்  அள்ளித் தருவேன் -ஒரு   
அசசாரம்  தந்து விட்டால்  ஆனந்தம்  அடைவேன் 

கெஞ்சி கெஞ்சி  கேட்டபோதும் மிஞ்சிப்  போனவள் -உனது 
கெடுமதியை உணராமல்  உலகில்  கேலிக்கானவன்  
வஞ்சி உந்தன்  காலடியில்  வணங்கி  மகிழவேன் -நான் 
வாழ மட்டும்  வரமும்  தந்தால்  வல்லமை  கொள்ளுவேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக