முல்லை மலர் சிரிப்பிலே
மோகம் வரும் நினைப்பிலே
கள்ளம் ஏதும் இல்லையடி மனசிலே -நீ
கண் திறந்து பாரடி என்னை நேரிலே
தென்றலாக வீசினேன்
தேனை யள்ளி பூசினேன்
அன்றில் போல வாழலாமா மயிலே -உன்னை
அள்ளிக்கொள்ள வேண்டு மடி வாழ்விலே
ஒன்று பட்டு வாழலாம்
ஊர்கள் தோறும் போகலாம்
நன்று என்ரே நினைத்து விடு -கிளியே
நம்பி நீயும் வந்திடுவாய் வெளியே
பொன்னும் பொருளும் நிறைய உண்டு
பொங்கும் இளமை தானும் உண்டு
கண்ணில் வைத்துக் காப்பேன் கனியே
காதல் வேகம் மீறுதடி மயிலே
உன்மடியில் நான் வசிக்க
உத்தரவு தந்து விடு
தென் பொதிகை தென்றலும் நீயடி -உன்னை
தேடி வந்த திருத்தொண்டன் நானடி
மோகம் வரும் நினைப்பிலே
கள்ளம் ஏதும் இல்லையடி மனசிலே -நீ
கண் திறந்து பாரடி என்னை நேரிலே
தென்றலாக வீசினேன்
தேனை யள்ளி பூசினேன்
அன்றில் போல வாழலாமா மயிலே -உன்னை
அள்ளிக்கொள்ள வேண்டு மடி வாழ்விலே
ஒன்று பட்டு வாழலாம்
ஊர்கள் தோறும் போகலாம்
நன்று என்ரே நினைத்து விடு -கிளியே
நம்பி நீயும் வந்திடுவாய் வெளியே
பொன்னும் பொருளும் நிறைய உண்டு
பொங்கும் இளமை தானும் உண்டு
கண்ணில் வைத்துக் காப்பேன் கனியே
காதல் வேகம் மீறுதடி மயிலே
உன்மடியில் நான் வசிக்க
உத்தரவு தந்து விடு
தென் பொதிகை தென்றலும் நீயடி -உன்னை
தேடி வந்த திருத்தொண்டன் நானடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக