வியாழன், 29 மார்ச், 2018

அழகு- 321

கற்பனை   வானில்  பறந்து  வந்தேன் -என்
கண்களால் அழகினை  காண  வந்தேன்
நின்றால்    நடந்தால்  நிலம்  அழகு -அதை
நினைக்க நினைக்க  மனம் அழகு

ஓடும் அருவிகள்  தரும்  அழகு -மேலே
உயரப்  பறப்பதும்  வெகு அழகு
பாடும்  குயிலும்  புது  அழகு -அதனை
படைத்த  இறைவனோ  பேரழகு

தமிழை  படித்திட  வரும்  அழகு -நம்
தலைவர்கள்  பேசசும்  தான் அழகு
அமிழ்தம்  என்றும்  நமக்கு   அழகு -இதனை
அறிந்து   கொள்வது  பெரும்  அழகு

நிமிர்ந்து  நடக்க   நீ  அழகு -பெண்ணை
நினைத்து  ரசித்திட  வரும்  அழகு
உயர்ந்த   எண்ணம்  உனக்கு  அழகு -பிறர்க்கு
உதவிகள்  செய்தால்  பலன்  அழகு

வானம் தந்திட்ட  நிலா  அழகு -ஏழைக்கு
வாரி   வழங்குதல்   நல் அழகு
தானம்   என்பது  தனி  அழகு -உலகில்
தாயும்  தமிழும்  எனக்கு  அழகு

-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக