கற்பனை வானில் பறந்து வந்தேன் -என்
கண்களால் அழகினை காண வந்தேன்
நின்றால் நடந்தால் நிலம் அழகு -அதை
நினைக்க நினைக்க மனம் அழகு
ஓடும் அருவிகள் தரும் அழகு -மேலே
உயரப் பறப்பதும் வெகு அழகு
பாடும் குயிலும் புது அழகு -அதனை
படைத்த இறைவனோ பேரழகு
தமிழை படித்திட வரும் அழகு -நம்
தலைவர்கள் பேசசும் தான் அழகு
அமிழ்தம் என்றும் நமக்கு அழகு -இதனை
அறிந்து கொள்வது பெரும் அழகு
நிமிர்ந்து நடக்க நீ அழகு -பெண்ணை
நினைத்து ரசித்திட வரும் அழகு
உயர்ந்த எண்ணம் உனக்கு அழகு -பிறர்க்கு
உதவிகள் செய்தால் பலன் அழகு
வானம் தந்திட்ட நிலா அழகு -ஏழைக்கு
வாரி வழங்குதல் நல் அழகு
தானம் என்பது தனி அழகு -உலகில்
தாயும் தமிழும் எனக்கு அழகு
-
கண்களால் அழகினை காண வந்தேன்
நின்றால் நடந்தால் நிலம் அழகு -அதை
நினைக்க நினைக்க மனம் அழகு
ஓடும் அருவிகள் தரும் அழகு -மேலே
உயரப் பறப்பதும் வெகு அழகு
பாடும் குயிலும் புது அழகு -அதனை
படைத்த இறைவனோ பேரழகு
தமிழை படித்திட வரும் அழகு -நம்
தலைவர்கள் பேசசும் தான் அழகு
அமிழ்தம் என்றும் நமக்கு அழகு -இதனை
அறிந்து கொள்வது பெரும் அழகு
நிமிர்ந்து நடக்க நீ அழகு -பெண்ணை
நினைத்து ரசித்திட வரும் அழகு
உயர்ந்த எண்ணம் உனக்கு அழகு -பிறர்க்கு
உதவிகள் செய்தால் பலன் அழகு
வானம் தந்திட்ட நிலா அழகு -ஏழைக்கு
வாரி வழங்குதல் நல் அழகு
தானம் என்பது தனி அழகு -உலகில்
தாயும் தமிழும் எனக்கு அழகு
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக