இதழ் தரும் சுவைதனை நாடி வந்தேன் -உன்
இருவிழி பாதையை தேடி வந்தேன்
முதல் முதலாய் பேரெழில் முகமும் கண்டேன் -அதில்
முழுவதும் என்னை நான் கரைத்துக்கொன்டேன்
கண்களின் அழகோ என்றைக்கும் வான் நீலம் -உனது
கனிஇதழ் புன்னகை வெகு தாராளம்
பெண்களில் ராணி எனச் சொல்லவா -அதனால்
பித்தம் அடைந்தவன் எனக் கொள்ளவா
நீ காலடி நடந்திட புதுக் கவிதை உண்டு -பல
கவிஞர்கள் பாடுவார் உன்னைக்கண்டு
சேலடி வேலடி பொற்சிலை நீ எனக்கு -உன்னை
சேர்ந்திட்ட பெருமையோ எனக்கு இருக்கு
முத்துக்கள் மயங்கிடும் வெண் பல்வரிசை -உன்னிடம்
மோதினால் தோற்பவர் நிற்பது பலவரிசை
கத்திடும் குயில் உந்தன் கானமடி -உன்
காலடி தொழுதால் பெறுவது புது ஞானமடி
இரவுக்குள் முழு நிலவென நீ இருப்பாய் -நான்
இமைகளை மூடாமல் காவல் நிற்பேன்
உறவுக்குள் வந்திட உன் மனம் தொல்லையோ -எனது
உள்ளம் களித்திட நல்வழி இல்லையா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக