செவ்வாய், 27 மார்ச், 2018

உள்ளம் -318


இதழ் தரும்  சுவைதனை  நாடி  வந்தேன் -உன்
இருவிழி  பாதையை  தேடி  வந்தேன்
முதல் முதலாய்  பேரெழில்  முகமும்   கண்டேன் -அதில்
முழுவதும்  என்னை  நான்  கரைத்துக்கொன்டேன்

கண்களின்  அழகோ  என்றைக்கும்  வான் நீலம் -உனது
கனிஇதழ்  புன்னகை   வெகு  தாராளம்
பெண்களில்  ராணி   எனச் சொல்லவா -அதனால்
பித்தம்  அடைந்தவன்   எனக்  கொள்ளவா

நீ  காலடி  நடந்திட  புதுக்  கவிதை  உண்டு -பல
கவிஞர்கள்  பாடுவார்  உன்னைக்கண்டு
சேலடி  வேலடி  பொற்சிலை   நீ எனக்கு -உன்னை
சேர்ந்திட்ட  பெருமையோ  எனக்கு  இருக்கு

முத்துக்கள்   மயங்கிடும்  வெண் பல்வரிசை -உன்னிடம்
மோதினால்  தோற்பவர்  நிற்பது  பலவரிசை
கத்திடும்  குயில்  உந்தன்  கானமடி -உன்
காலடி  தொழுதால்  பெறுவது  புது ஞானமடி

இரவுக்குள்  முழு நிலவென  நீ இருப்பாய் -நான்
இமைகளை  மூடாமல்  காவல்  நிற்பேன்
உறவுக்குள்  வந்திட   உன் மனம்  தொல்லையோ -எனது
உள்ளம்  களித்திட  நல்வழி  இல்லையா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக