தில்லையை ஆண்டிடும் சிதம்பர நாதா -உனது
திருவருளாலே தேசத்தைக் காக்க வா
உள்ளதென்பார் இல்லை யென்பார் -உலகோர்
ஒருநாள் இந்த உண்மையை அறிவார் (தில்லை )
ஆயகலைகள் எனும் அறுபதும் நீயே -அம்மை
பார்வதியின் அருமைக் கணவனே
சேய்கள் செய்யும் சிறு பிழை எல்லாம் -என்றும்
சித்தமிறங்கி சற்றுப் பொறுத்தருள்வாயே (தில்லை )
காலினைத் தூக்கியே ஆடிடும் தெய்வமே -உனது
கருணையைப் போற்றி நின் கழலடி வணங்கினோம்
வேளை வருமோ விடியல் தருமோ -இந்த
ஏழையர் மீதிலே உனது இரக்கம் படுமோ (தில்லை)
தப்பாய் ஆட்டம் ஆடிடும் தருக்கரை -நீயும்
தரணியில் அழித்தே தர்மம் செழிக்க வா
அப்பனே உன்னருளில் வாழுவோம் -இந்த
அடியரை மறந்திடில் எங்குதான் போகுவோம் (தில்லை)
தில்லையை மிஞ்சவே ஒரு தேசமும் இல்லை உனது
திருவருள் அன்றி உயர் கதி இல்லையே
எல்லை யில்லா சுகம் தரும் வடிவே -எங்கள்
இதயங்கள் குளிர்ந்திட இன்றே வருவாய் (தில்லை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக