கூடு விட்டு தினம் தினம் வெளியினிலே -ஒரே
கூட்டமாய் பறந்திடும் பறவைகளே
வாடும் என்கதை கேளீரோ -காதில்
வாங்கியே ஒருபதில் சொல்வீரோ
தன்னந் தனியாக இருந்தேனே -அவளால்
தவறியே சேற்றினில் விழுந்தேனே
மின்னும் அழகினை நன்மையென -நான்
மீளாத சிறையினில் அகப்பட்டேன்
ஆசைத் தீயினை தினமும் வளர்க்கின்றாள் -என்னை
அடிமை போலவே நினைக்கின்றாள்
காசினைக் கண்டதும் சிரிக்கின்றாள் -எனோ
கவலைகள் நிறையவே தருகின்றாள்
உற்றார் உறவுகள் இழந்தேனே -எனது
உயிராய் அவளையும் நினைத்தேனே
மற்றவர் முன்னே தலைகுனிய -அந்த
மங்கை எதற்கு முடிவெடுத்தாள்
குற்றம் எதுவும் செய்யவில்லை -அவளிடம்
கொடிய வார்த்தைகள் பேசவில்லை
பற்று மிக வைப்பது பாவமெனில் -நான்
பார்த்து ரசித்த்து மோகமென்பேன்
என்னுடன் வாழ்ந்திட வைப்பீரே -இனியேனும்
இனிமையாய் பழகிடச் செய்வீரே
பொன்மகள் தன்னுடன் என்வாழ்வு -அவள்
புரிந்திட மறுத்தால் பெரும் தாழ்வு
கூட்டமாய் பறந்திடும் பறவைகளே
வாடும் என்கதை கேளீரோ -காதில்
வாங்கியே ஒருபதில் சொல்வீரோ
தன்னந் தனியாக இருந்தேனே -அவளால்
தவறியே சேற்றினில் விழுந்தேனே
மின்னும் அழகினை நன்மையென -நான்
மீளாத சிறையினில் அகப்பட்டேன்
ஆசைத் தீயினை தினமும் வளர்க்கின்றாள் -என்னை
அடிமை போலவே நினைக்கின்றாள்
காசினைக் கண்டதும் சிரிக்கின்றாள் -எனோ
கவலைகள் நிறையவே தருகின்றாள்
உற்றார் உறவுகள் இழந்தேனே -எனது
உயிராய் அவளையும் நினைத்தேனே
மற்றவர் முன்னே தலைகுனிய -அந்த
மங்கை எதற்கு முடிவெடுத்தாள்
குற்றம் எதுவும் செய்யவில்லை -அவளிடம்
கொடிய வார்த்தைகள் பேசவில்லை
பற்று மிக வைப்பது பாவமெனில் -நான்
பார்த்து ரசித்த்து மோகமென்பேன்
என்னுடன் வாழ்ந்திட வைப்பீரே -இனியேனும்
இனிமையாய் பழகிடச் செய்வீரே
பொன்மகள் தன்னுடன் என்வாழ்வு -அவள்
புரிந்திட மறுத்தால் பெரும் தாழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக