செவ்வாய், 17 ஏப்ரல், 2018

காமன் கணை 358


கத்தும்   கடல்   அலையோ  -அவனது
கருமை     நிறக்   கூந்தல்
முத்து போல    மோகனப்  பல் வரிசை -நான்
சித்தம்   கலங்கிடவே  சிறந்த  பேரழகன்

நீண்ட    நெடு    உயரம்  -என்றும்
நிமிர்ந்த     சிங்க  நடை
தூண்டில்   போட்டு    இழுத்தான் -அடியே
அவனால்   சுகம்  பெற   வழியு முண்டோ

அள்ளியே   என்னையும்  கட்டி  அணைப்பானோ -இனி
எனது    ஆவியில்   என்றும்   கலப்பானோ
கள்ளியே    நீயும்   சொல்லடி  -அந்தக்
கள்வன்    பெயர்   என்ன   கேளடி

இளமைத்    திமிர்   அடக்கிட  -அவன்
இறைவன்   தந்திட்ட   வரமோ
புலவர்   பாடும்    தமிழில்  -ஒரு
புறாவை  தூது   விடுவோமா

கண்கள்   ஒன்றெனக்   கலந்தது  -உடனே
காமன்   கணையும்  பாய்ந்தது
 பெண்கள்   அவனைக்  கண்டாலோ -தலையில்
பித்தம்   அதிகமாய்    சுரந்தது

சீக்கிரம்   நீயும்   அழைத்து  வாடி -புது
சீதனம்    தருவேன்    நானடி
பாக்கு   வெற்றிலை    மாற்றலாம் -இனிமேல்
பகலிலும்   இரவினைக்   காணலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக