கத்தும் கடல் அலையோ -அவனது
கருமை நிறக் கூந்தல்
முத்து போல மோகனப் பல் வரிசை -நான்
சித்தம் கலங்கிடவே சிறந்த பேரழகன்
நீண்ட நெடு உயரம் -என்றும்
நிமிர்ந்த சிங்க நடை
தூண்டில் போட்டு இழுத்தான் -அடியே
அவனால் சுகம் பெற வழியு முண்டோ
அள்ளியே என்னையும் கட்டி அணைப்பானோ -இனி
எனது ஆவியில் என்றும் கலப்பானோ
கள்ளியே நீயும் சொல்லடி -அந்தக்
கள்வன் பெயர் என்ன கேளடி
இளமைத் திமிர் அடக்கிட -அவன்
இறைவன் தந்திட்ட வரமோ
புலவர் பாடும் தமிழில் -ஒரு
புறாவை தூது விடுவோமா
கண்கள் ஒன்றெனக் கலந்தது -உடனே
காமன் கணையும் பாய்ந்தது
பெண்கள் அவனைக் கண்டாலோ -தலையில்
பித்தம் அதிகமாய் சுரந்தது
சீக்கிரம் நீயும் அழைத்து வாடி -புது
சீதனம் தருவேன் நானடி
பாக்கு வெற்றிலை மாற்றலாம் -இனிமேல்
பகலிலும் இரவினைக் காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக