ஆடி வரும் மயிலே -கண்ணம்மா
எந்தன் அழகு நிறை பெட்டகமே
பாடி வரும் குயில் தான் -உனக்கு
பருவக் கதை சொல்லியதோ
தென்றலைத் தூது விட்டேன் -கண்ணம்மா
திரும்பி நீயும் பார்க்கவில்லை
ஒன்றுபட நினைத்தேன் -கண்ணம்மா
உரிய பதில் நன்கு சொல்லு
எட்டாப் பெருங்கிளையில் கண்ணம்மா
நீ எதற்கு அமர்ந்து கொண்டாய்
தொட்டால் சுடுவதென்ன கண்ணம்மா
கூடும் சுகமது எனக்கில்லையா
ஆற்றங் கரை தன்னிலே -கண்ணம்மா
அருகினில் நீ இருக்க
நேற்று கனவு கண்டேன் -கண்ணம்மா
மனதில் நிம்மதி இல்லையடி
முல்லைக் கொடியோரம் -கண்ணம்மா
மோகன முழு நிலவில்
தொல்லைகள் செய்ய வந்தேன் -கண்ணம்மா
என் தோளில் சாய்ந்து கொள்ளு
ஏக்கப் பெரு மூச்சு கண்ணம்மா
என்னை இரவிலும் வாட்டுதடி
தூக்கம் என்பதனை மறந்தேன் -கண்ணம்மா
பல்வகை துன்பங்கள் சூழ்ந்ததடி
பார்க்கும் இடங்கள் எல்லாம் -கண்ணம்மா
பதிவது உன் முகமே
என்னில் கலப்பதற்கு -கண்ணம்மா
இளகும் மனம் இல்லையோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக