திங்கள், 16 ஏப்ரல், 2018

அற்புதம் 355

வெள்ளைத்  தாமரையில்  வீற்றே  இருப்பாய் -நல்ல
வீணை   கூட்டும்   ஒலியில்  தெரிவாய்
கள்ளமற்ற   குழந்தைகள்   வாழ்வில் -தினம்
கல்வியை   யருளும்  கருணைத்  தேவியே

படைக்கும்   பிரமன்   பக்கம்   இருப்பாய் -பண்பில்
மேலோர்    பணிந்துனை   தொழுவார்
விஎடைக்குள்   நிறைந்திடும்   வித்தகி  நீயே -நாங்கள் -
வேண்டி யே   அழைததோம்  விரைந்து   நீ  வா  வா

கொடுத்ததை   திரும்ப நீ     வாங்குவதில்லை -உனது
கோலஉருவம்  என்றைக்கும்   வெள்ளை
எடுத்த வேலை   முடித்திட    வேண்டி  -உன்னை
என்றுமே   தொழுவோம்  எமக்கருள்   செய்வாய்

நாவில்   அமர்ந்தால்   நல்லது   நடக்கும் -இந்த
நானிலம்   சிறந்திட   நன்மையும்  பெருகும்
பாவினில்   உறைந்திடும்   பத்தினி  நீயே -உலகில்
பக்தரைக்   காத்திடும்    உத்தமித்   தாயே

எண்ணிய   யாவையும்   இனிதாய்   நடக்க -வாடும்
ஏழையின்   மனதில்   என்றுமே   நிலைப்பாய்
கண்ணினைப்  போலவே   காவல்   காக்க -என்றும்
கற்றவர்   போற்றிடும்   அற்புதம்    நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக