வெள்ளைத் தாமரையில் வீற்றே இருப்பாய் -நல்ல
வீணை கூட்டும் ஒலியில் தெரிவாய்
கள்ளமற்ற குழந்தைகள் வாழ்வில் -தினம்
கல்வியை யருளும் கருணைத் தேவியே
படைக்கும் பிரமன் பக்கம் இருப்பாய் -பண்பில்
மேலோர் பணிந்துனை தொழுவார்
விஎடைக்குள் நிறைந்திடும் வித்தகி நீயே -நாங்கள் -
வேண்டி யே அழைததோம் விரைந்து நீ வா வா
கொடுத்ததை திரும்ப நீ வாங்குவதில்லை -உனது
கோலஉருவம் என்றைக்கும் வெள்ளை
எடுத்த வேலை முடித்திட வேண்டி -உன்னை
என்றுமே தொழுவோம் எமக்கருள் செய்வாய்
நாவில் அமர்ந்தால் நல்லது நடக்கும் -இந்த
நானிலம் சிறந்திட நன்மையும் பெருகும்
பாவினில் உறைந்திடும் பத்தினி நீயே -உலகில்
பக்தரைக் காத்திடும் உத்தமித் தாயே
எண்ணிய யாவையும் இனிதாய் நடக்க -வாடும்
ஏழையின் மனதில் என்றுமே நிலைப்பாய்
கண்ணினைப் போலவே காவல் காக்க -என்றும்
கற்றவர் போற்றிடும் அற்புதம் நீயே
வீணை கூட்டும் ஒலியில் தெரிவாய்
கள்ளமற்ற குழந்தைகள் வாழ்வில் -தினம்
கல்வியை யருளும் கருணைத் தேவியே
படைக்கும் பிரமன் பக்கம் இருப்பாய் -பண்பில்
மேலோர் பணிந்துனை தொழுவார்
விஎடைக்குள் நிறைந்திடும் வித்தகி நீயே -நாங்கள் -
வேண்டி யே அழைததோம் விரைந்து நீ வா வா
கொடுத்ததை திரும்ப நீ வாங்குவதில்லை -உனது
கோலஉருவம் என்றைக்கும் வெள்ளை
எடுத்த வேலை முடித்திட வேண்டி -உன்னை
என்றுமே தொழுவோம் எமக்கருள் செய்வாய்
நாவில் அமர்ந்தால் நல்லது நடக்கும் -இந்த
நானிலம் சிறந்திட நன்மையும் பெருகும்
பாவினில் உறைந்திடும் பத்தினி நீயே -உலகில்
பக்தரைக் காத்திடும் உத்தமித் தாயே
எண்ணிய யாவையும் இனிதாய் நடக்க -வாடும்
ஏழையின் மனதில் என்றுமே நிலைப்பாய்
கண்ணினைப் போலவே காவல் காக்க -என்றும்
கற்றவர் போற்றிடும் அற்புதம் நீயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக