செவ்வாய், 17 ஏப்ரல், 2018

நல்லன 360

தனியே    இருந்தேன்
தமிழாய்   வந்தாய்
கனியே   யென்றேன்
கன்னம்   சிவந்தாய்

துணையாய் கொண்டோம்
சுகமே    கண்டோம்
மணியாய்  பிள்ளைகள்
மகிழ்வே    தந்தனர்

நாளும்   வந்தது
நல்லன  நடந்தது
கோல   குமரனால்
குடும்பம் செழித்தது

தாயை   நினைத்தேன்
தமிழால்   வளர்ந்தேன்
வாய்மை  வழியினில்
வாழ்க்கை  பயணம்

உலகோர்   வருந்திட
ஒருநாள்   நினையேன்
கள்ளம்   வாழ்வில்
கண்டதும்   இல்லை

உலகம்   சிறந்திட
உழைத்திட   வேண்டும்
கலகம்  அழிந்திட
கடவுளே   வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக