நெஞ்சத்தில் வைத்தே
நினைத்து மகிழ்வேன்
கொஞ்சும் தமிழே
குலவி சிரிப்பேன்
வானப் பறவைகளே
வார்த்தை கேளீரோ
மோன நிலவினுக்கு
முதலில் என்வணக்கம்
கத்தும் கடல் அலையே
காலை தொடும் நுரையே
நித்தம் அலைவதென்ன
நேரில் காண்பதென்ன
பாடும் குயிலினமே
உன் பாடல் யாருக்கடி
ஓடும் அருவிகளே
உன்னுள்ளே இருப்பது யார் ?
கழுத்து மணியோசை
காற்றில் வருகுதடி
சிறுத்த இடையினிலே
சிங்காரம் தெரியுதடி
ஆடும் மயிலினமே
ஆசையை யாரறிவார்
கூடிடும் கூட்டங்களே
கொள்கையை விற்றிடவா
நினைத்து மகிழ்வேன்
கொஞ்சும் தமிழே
குலவி சிரிப்பேன்
வானப் பறவைகளே
வார்த்தை கேளீரோ
மோன நிலவினுக்கு
முதலில் என்வணக்கம்
கத்தும் கடல் அலையே
காலை தொடும் நுரையே
நித்தம் அலைவதென்ன
நேரில் காண்பதென்ன
பாடும் குயிலினமே
உன் பாடல் யாருக்கடி
ஓடும் அருவிகளே
உன்னுள்ளே இருப்பது யார் ?
கழுத்து மணியோசை
காற்றில் வருகுதடி
சிறுத்த இடையினிலே
சிங்காரம் தெரியுதடி
ஆடும் மயிலினமே
ஆசையை யாரறிவார்
கூடிடும் கூட்டங்களே
கொள்கையை விற்றிடவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக