புதன், 18 ஏப்ரல், 2018

கொள்கை 362

நெஞ்சத்தில்    வைத்தே
நினைத்து    மகிழ்வேன்
கொஞ்சும்    தமிழே
குலவி      சிரிப்பேன்

வானப்    பறவைகளே
வார்த்தை    கேளீரோ
மோன    நிலவினுக்கு
முதலில்    என்வணக்கம்

கத்தும்    கடல் அலையே
காலை  தொடும் நுரையே
நித்தம்    அலைவதென்ன
நேரில்    காண்பதென்ன

பாடும்     குயிலினமே
உன் பாடல்    யாருக்கடி
ஓடும்     அருவிகளே
உன்னுள்ளே   இருப்பது யார் ?

கழுத்து    மணியோசை
காற்றில்    வருகுதடி
சிறுத்த    இடையினிலே
சிங்காரம்    தெரியுதடி

ஆடும்   மயிலினமே
ஆசையை     யாரறிவார்
கூடிடும்     கூட்டங்களே
கொள்கையை    விற்றிடவா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக