வாழ்கின்ற வாழ்க்கையில்
வள்ளலாக மாறலாம்
சூழ்கின்ற துயர்களை
தூசெனவே தள்ளலாம்
பேசுகின்ற பேச்சினில்
பெருந்தன்மை காட்டலாம்
வீசுகின்ற காற்றினில்
விவரம்கூட அறியலாம்
நீயும் நானும் ஒன்றென
நினைவிலே வாழலாம்
நோயுமின்றி உலகிலே
நூறு வருடம் வசிக்கலாம்
ஆணும் பெண்ணும் சரிசமம்
ஆன்றோர் அன்று சொன்னது
வீணில் பெருமை பேசுதல்
வெட்டிப் பேச்சு அல்லவோ
கண்ணில் காதலும்
கருத்தில் மோதலும்
மண்ணிலே நிச்சயம்
மனதிலே கொள்ளுவாய்
வீரமின்றி வாழ்பவர்
வீழ்ந்த மரம் போன்றவர்
யாருமின்றி வாழ்வதோ
முடிந்த நன்மை செய்குவீர்
வள்ளலாக மாறலாம்
சூழ்கின்ற துயர்களை
தூசெனவே தள்ளலாம்
பேசுகின்ற பேச்சினில்
பெருந்தன்மை காட்டலாம்
வீசுகின்ற காற்றினில்
விவரம்கூட அறியலாம்
நீயும் நானும் ஒன்றென
நினைவிலே வாழலாம்
நோயுமின்றி உலகிலே
நூறு வருடம் வசிக்கலாம்
ஆணும் பெண்ணும் சரிசமம்
ஆன்றோர் அன்று சொன்னது
வீணில் பெருமை பேசுதல்
வெட்டிப் பேச்சு அல்லவோ
கண்ணில் காதலும்
கருத்தில் மோதலும்
மண்ணிலே நிச்சயம்
மனதிலே கொள்ளுவாய்
வீரமின்றி வாழ்பவர்
வீழ்ந்த மரம் போன்றவர்
யாருமின்றி வாழ்வதோ
முடிந்த நன்மை செய்குவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக