புதன், 18 ஏப்ரல், 2018

வள்ளல் 363

வாழ்கின்ற    வாழ்க்கையில்
வள்ளலாக     மாறலாம்
சூழ்கின்ற      துயர்களை
தூசெனவே   தள்ளலாம்

பேசுகின்ற     பேச்சினில்
பெருந்தன்மை  காட்டலாம்
வீசுகின்ற     காற்றினில்
விவரம்கூட  அறியலாம்

நீயும் நானும்  ஒன்றென
நினைவிலே  வாழலாம்
நோயுமின்றி  உலகிலே
நூறு வருடம்   வசிக்கலாம்

ஆணும் பெண்ணும்  சரிசமம்
ஆன்றோர்  அன்று சொன்னது
வீணில் பெருமை   பேசுதல்
வெட்டிப்  பேச்சு   அல்லவோ

கண்ணில்    காதலும்
கருத்தில்    மோதலும்
மண்ணிலே  நிச்சயம்
மனதிலே    கொள்ளுவாய்

வீரமின்றி    வாழ்பவர்
வீழ்ந்த மரம்   போன்றவர்
யாருமின்றி    வாழ்வதோ
முடிந்த நன்மை   செய்குவீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக