திரு நாள் இதுபோல் வருமோ தோழி -என்
திருமால் அழகன் வரும் நாள் எதுவோ
கனி வாய் சேர்த்து கவிதை சொன்னான் -நல்ல
கவனமாய் அணைத்து கண்களை மறைத்தான்
தனியே இருக்கையில் தழுவிக் கொன்டேன் -நான்
தவியாய் தவிக்கையில் தாவியே இழுத்தான்
இனிமேல் எனக்கு ஒரு பிறவியும் வேண்டாம் -அவனது
இடப்புறம் தனியே எனக்கிடம் வேண்டும்
குழலினை ஊதியே கொள்ளை அடித்தான் -ஒருநாள்--
குடையாய் மலையினைக் கொண்டே தடுத்தான்
மழலையர் விரும்பிடும் மகிழ்ச்சியே கண்ணன் -திரு
மாலவன் வேங்கடன் மங்கள நாயகன்
இலக்குமி தன்னையே மார்பினில் கொண்டான் -என்றும்
ஏழையர் சுகம்பெற இன்னருள் புரிவான்
கலக்கம் தீர்த்திட இங்கே கண்ணனும் வருவான் -தமிழ்
கவிதையால் துதித்தோம் காத்திட வருக
எண்ணம் எதிலும் எழிலாய் திகழ்பவன் -வரும்
இன்னலைத் தீர்ப்பதில் இறைவனும் அவனே
மண்ணினைக் காத்திட வந்திடு கண்ணா -உந்தன்
மலரடி தொழுதோம் எங்கள் மாதவா வருக
சங்கை எடுத்தான் தர்மம் தழைக்க -அன்று
தன கை கொடுத்தான் தங்கை பிழைக்க
கங்கைக் கரையினில் அமைந்தது பிருந்தாவனமே -கண்ணன்
காலடியில் மயங்குது எங்கள் மனமே
திருமால் அழகன் வரும் நாள் எதுவோ
கனி வாய் சேர்த்து கவிதை சொன்னான் -நல்ல
கவனமாய் அணைத்து கண்களை மறைத்தான்
தனியே இருக்கையில் தழுவிக் கொன்டேன் -நான்
தவியாய் தவிக்கையில் தாவியே இழுத்தான்
இனிமேல் எனக்கு ஒரு பிறவியும் வேண்டாம் -அவனது
இடப்புறம் தனியே எனக்கிடம் வேண்டும்
குழலினை ஊதியே கொள்ளை அடித்தான் -ஒருநாள்--
குடையாய் மலையினைக் கொண்டே தடுத்தான்
மழலையர் விரும்பிடும் மகிழ்ச்சியே கண்ணன் -திரு
மாலவன் வேங்கடன் மங்கள நாயகன்
இலக்குமி தன்னையே மார்பினில் கொண்டான் -என்றும்
ஏழையர் சுகம்பெற இன்னருள் புரிவான்
கலக்கம் தீர்த்திட இங்கே கண்ணனும் வருவான் -தமிழ்
கவிதையால் துதித்தோம் காத்திட வருக
எண்ணம் எதிலும் எழிலாய் திகழ்பவன் -வரும்
இன்னலைத் தீர்ப்பதில் இறைவனும் அவனே
மண்ணினைக் காத்திட வந்திடு கண்ணா -உந்தன்
மலரடி தொழுதோம் எங்கள் மாதவா வருக
சங்கை எடுத்தான் தர்மம் தழைக்க -அன்று
தன கை கொடுத்தான் தங்கை பிழைக்க
கங்கைக் கரையினில் அமைந்தது பிருந்தாவனமே -கண்ணன்
காலடியில் மயங்குது எங்கள் மனமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக