தாயின் வயிற்றினில் நான் பிறந்தாலும் -என்னை
தமக்கை நீதான் தத்து எடுத்தாய்
வாயினால் உன்புகழ் பாடுதற்கு --வற்றாத
தமிழிலே வார்த்தைகள் இல்லை (தாயின்)
குளிக்க வைத்து உணவு தந்து எம்
கூட யிருந்து பல கதைகள் சொல்வாய்
சலிப்பு என்பதை நீயும் கொள்ளாமல் --எனக்கு
சகலமும் கற்றுக் கொடுத்தவளே (தாயின்)
உயிருக்கு உயிராய் என்னை வளர்த்தாய் இங்கு
உண்மை அன்பினை ஊட்டி விட்டாய்
பயிருக்கு நீர்போல் என்வாழ்வில் --தினம்
பார்த்து ரசித்திட்ட நீ எனது தாயல்லவா (தாயின் )
என்னை உன் தம்பியாய் ஏற்றுக் கொண்டாய் --இனி
என்றுமே பிரியேன் என்று சொன்னாய்
கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் போல் --என் கண்ணே
கயவர்கள் சூழ்ச்சியில் வீழ்ந்து விட்டாய் (தாயின்)
நாளும் உன்னையே நான் நினைப்பேன் --என்றும்
நன்றிகள் சொல்லி உன்னை துதிப்பேனே
காலம் கடுகியோடி மறைந்து விடும் --எந்தன்
கண்மணி அக்கா உன்னை நானும் மறவேனே
தமக்கை நீதான் தத்து எடுத்தாய்
வாயினால் உன்புகழ் பாடுதற்கு --வற்றாத
தமிழிலே வார்த்தைகள் இல்லை (தாயின்)
குளிக்க வைத்து உணவு தந்து எம்
கூட யிருந்து பல கதைகள் சொல்வாய்
சலிப்பு என்பதை நீயும் கொள்ளாமல் --எனக்கு
சகலமும் கற்றுக் கொடுத்தவளே (தாயின்)
உயிருக்கு உயிராய் என்னை வளர்த்தாய் இங்கு
உண்மை அன்பினை ஊட்டி விட்டாய்
பயிருக்கு நீர்போல் என்வாழ்வில் --தினம்
பார்த்து ரசித்திட்ட நீ எனது தாயல்லவா (தாயின் )
என்னை உன் தம்பியாய் ஏற்றுக் கொண்டாய் --இனி
என்றுமே பிரியேன் என்று சொன்னாய்
கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் போல் --என் கண்ணே
கயவர்கள் சூழ்ச்சியில் வீழ்ந்து விட்டாய் (தாயின்)
நாளும் உன்னையே நான் நினைப்பேன் --என்றும்
நன்றிகள் சொல்லி உன்னை துதிப்பேனே
காலம் கடுகியோடி மறைந்து விடும் --எந்தன்
கண்மணி அக்கா உன்னை நானும் மறவேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக