திங்கள், 30 ஏப்ரல், 2018

அக்கா 398

தாயின்  வயிற்றினில்  நான் பிறந்தாலும் -என்னை
தமக்கை  நீதான்   தத்து எடுத்தாய்
வாயினால்  உன்புகழ்  பாடுதற்கு --வற்றாத
தமிழிலே  வார்த்தைகள்  இல்லை  (தாயின்)

குளிக்க   வைத்து  உணவு  தந்து  எம்
கூட யிருந்து  பல கதைகள்  சொல்வாய்
சலிப்பு  என்பதை  நீயும்  கொள்ளாமல் --எனக்கு
சகலமும்   கற்றுக்   கொடுத்தவளே  (தாயின்)

உயிருக்கு  உயிராய்  என்னை  வளர்த்தாய் இங்கு
உண்மை  அன்பினை  ஊட்டி  விட்டாய்
பயிருக்கு  நீர்போல்  என்வாழ்வில் --தினம்
பார்த்து  ரசித்திட்ட   நீ  எனது  தாயல்லவா (தாயின் )

என்னை  உன் தம்பியாய்  ஏற்றுக்  கொண்டாய் --இனி
என்றுமே  பிரியேன்  என்று  சொன்னாய்
கண்ணை  விற்று  சித்திரம்  வாங்குதல்  போல் --என் கண்ணே
கயவர்கள்  சூழ்ச்சியில்  வீழ்ந்து  விட்டாய் (தாயின்)

நாளும்  உன்னையே  நான்  நினைப்பேன் --என்றும்
நன்றிகள்  சொல்லி  உன்னை  துதிப்பேனே
காலம்  கடுகியோடி  மறைந்து  விடும் --எந்தன்
கண்மணி  அக்கா  உன்னை  நானும்  மறவேனே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக