செவ்வாய், 24 ஏப்ரல், 2018

பின்னல் 380

வண்ணக்   கரு விழி 
கன்ன   கதுப்பிலே 
வந்து    அழைப்பதுவோ 

கண்ணன்  எனப்படும் 
கள்வனவன்   செயும் 
காதல்   கலை யல்லவா 

கற்றும்    தெளிந்திட 
முற்றும்   உணர்ந்தவர் 
சுற்றம்    அறிந்தவரோ 

கொற்றம்    அடைந்தவர் 
குற்றம்    புரிந்தவரோ 
பற்றும்    மறந்தவரே 

உண்மை    பேசுவோர் 
உலகில்   சிறந்தவர் 
உன்னதம்  பெற்றவரே 

தன்னை   அறிந்தவர் 
தானாய்   ஆனவர் 
தலைவன்    ஆனவரே 

பின்னல்    சடையினை 
பின்னி   இழுத்தவன் 
கன்னியின்  காதலனே 

எண்ணி    அவனை நிதம் 
ஏற்றுத்     துதிப்பவர் 
எல்லாம்  பெற்றவரே 

பெற்றவை  அனைத்தையும் 
விற்றுத்    துணிபவரோ 
வித்தைகள்   புரிபரோ 

தமிழைத்   தினம் தினம் 
தனதெனக்   கொண்டவர் 
தர்மம்     காத்தவரே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக