திங்கள், 16 ஏப்ரல், 2018

வல்லபி 353

உற்ற துணை   எனக்கு   நீயல்லவா -நல்
உத்தமியே    சக்தி  இமவான்  திருமகளே
கற்றிட்ட   கலை  உந்தன்  கருணையாலன்றோ -அடியேன்
கவிதையின்   கருவாய்   கனிந்தவள்  அன்றோ

பரமனை   மணந்திட  மாதவம்   செய்தாய் -சிவனார்
பக்தியினாலே   அவரையே   மணந்தாய்
சுரங்களில்   இசையாய்   சூழல் பவள்  நீயே -சிவ
காம சுந்தரி    எங்களின்  சங்கரி தாயே

ஆனைமுகன்   வேலன்   அன்னையுமானாய் -என்றும்
அடியவர்க்  கருள்தரும்   அபயகஸ்தம்   நீயே
மோனப்   பொருள் கூறும்   மூகாம்பிகை  தாயே -கொடிய
மூகாசுரனை   வதைத்திட்ட   மோஹினி   போற்றி

நாவினில்   நீதான்   நர்த்தனம்   ஆடுகிறாய் -இந்த
நானிலம்   நலம் பெற   நாயகி  யருள்வாய்
பாவினில்    உறையும்   பார்வதியே   அம்மா -உனது
பக்தரைக்   காத்திடும்   பரம்பொருள்   தாயே

வல்லமை    திறத்தால்   வளங்கள்   தருக  -உலகில்
வறுமைகள்   நீக்கிடும்   வல்லபியே   அம்மா
தொல்லைகள்   போக்கியே   சுகம் பெற  செய்வாய் -உனது
தூய பாதம்  பற்றித்   தொழுதே  நிற்போம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக