உற்ற துணை எனக்கு நீயல்லவா -நல்
உத்தமியே சக்தி இமவான் திருமகளே
கற்றிட்ட கலை உந்தன் கருணையாலன்றோ -அடியேன்
கவிதையின் கருவாய் கனிந்தவள் அன்றோ
பரமனை மணந்திட மாதவம் செய்தாய் -சிவனார்
பக்தியினாலே அவரையே மணந்தாய்
சுரங்களில் இசையாய் சூழல் பவள் நீயே -சிவ
காம சுந்தரி எங்களின் சங்கரி தாயே
ஆனைமுகன் வேலன் அன்னையுமானாய் -என்றும்
அடியவர்க் கருள்தரும் அபயகஸ்தம் நீயே
மோனப் பொருள் கூறும் மூகாம்பிகை தாயே -கொடிய
மூகாசுரனை வதைத்திட்ட மோஹினி போற்றி
நாவினில் நீதான் நர்த்தனம் ஆடுகிறாய் -இந்த
நானிலம் நலம் பெற நாயகி யருள்வாய்
பாவினில் உறையும் பார்வதியே அம்மா -உனது
பக்தரைக் காத்திடும் பரம்பொருள் தாயே
வல்லமை திறத்தால் வளங்கள் தருக -உலகில்
வறுமைகள் நீக்கிடும் வல்லபியே அம்மா
தொல்லைகள் போக்கியே சுகம் பெற செய்வாய் -உனது
தூய பாதம் பற்றித் தொழுதே நிற்போம்
உத்தமியே சக்தி இமவான் திருமகளே
கற்றிட்ட கலை உந்தன் கருணையாலன்றோ -அடியேன்
கவிதையின் கருவாய் கனிந்தவள் அன்றோ
பரமனை மணந்திட மாதவம் செய்தாய் -சிவனார்
பக்தியினாலே அவரையே மணந்தாய்
சுரங்களில் இசையாய் சூழல் பவள் நீயே -சிவ
காம சுந்தரி எங்களின் சங்கரி தாயே
ஆனைமுகன் வேலன் அன்னையுமானாய் -என்றும்
அடியவர்க் கருள்தரும் அபயகஸ்தம் நீயே
மோனப் பொருள் கூறும் மூகாம்பிகை தாயே -கொடிய
மூகாசுரனை வதைத்திட்ட மோஹினி போற்றி
நாவினில் நீதான் நர்த்தனம் ஆடுகிறாய் -இந்த
நானிலம் நலம் பெற நாயகி யருள்வாய்
பாவினில் உறையும் பார்வதியே அம்மா -உனது
பக்தரைக் காத்திடும் பரம்பொருள் தாயே
வல்லமை திறத்தால் வளங்கள் தருக -உலகில்
வறுமைகள் நீக்கிடும் வல்லபியே அம்மா
தொல்லைகள் போக்கியே சுகம் பெற செய்வாய் -உனது
தூய பாதம் பற்றித் தொழுதே நிற்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக