திங்கள், 9 ஏப்ரல், 2018

விருந்து 338

ஒருநாள்  இரவில்   தனியாக -எதிரில்
ஒருத்தி   வந்தாள்   அழகாக
பல நாள்   பார்த்திட்ட   ஓர்நினைவு =இனி
பரவசம்   தருமோ   அவள் உறவு

கணைகள்   வீசியே   கொல்வாளோ -இல்லை
காதல்   பேசிஎன்னை   வெல்வாளோ
இணையாய்   துணையாய்   வருவாளோ -தனது
இளமையை   பரிசாய்த்   தருவாளோ

பிறவி கள்   தோறும்   தொடர்வாளோ -நாளும்
பின்னிப்   பிணைந்து   செல்வாளோ
உறவின்   பயனை  நான்   அடைவேனோ -என்னிடம்
உயிருக்   குயிராய்   அவள்   இருப்பாளோ

காதல்   கலைகள்  மிக அறிவாளோ -தினம்
கட்டிலில்   புதுக் கதைகள்   படிப்பாளோ
மோகன   வலைதனை   விரிப்பாளோ -வீணாய்
மோதும்   போக்கினை   உடையவளோ

உறவில்   ரசித்திட   அழகாய்   நடப்பாளோ -அவள்
ஒவ்வொரு   கணமும்   துடிப்பாளோ
பறவை   போலவே   பறப்பாளோ -எனது
பசிக்கு    விருந்தாய்    கிடைப்பாளோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக