நல்லவர் வாழ்ந்திடக் காலமில்லை -இங்கே
நடக்கிற நாடகம் ஒன்றுமே புரியவில்லை
கொள்ளை யடித்தவன் வாழுகிறான் -அதை
குற்றமெனத் தடுத்தவன் மாளுகிறான்
பாலினில் நீரையும் கலக்கின்றான் -பாழும்
பரத்தையை உயர்வாய் மதிக்கின்றான்
வேலியைப் பிரித்துமே எரிகின்றான் -வயலில்
விளைஞ்சதை திருடியே செல்கின்றான்
பெண்களை அடிமையாய் நினைக்கின்றான் -அவர்
பெரும் பொருள் அனைத்தையும் பறிக்கின்றான்
கண்களை விற்று சித்திரம் வாங்குதல் போல் -நல்ல
கருத்தினை இழந்து எங்கோ திரிகின்றன
அறிஞர்கள் சொன்னதைக் கேட்கவில்லை -அவரடி
பற்றி நடந்திட என்னவோ மனமுமில்லை
எரிதழல் நடுவினில் சிரிக்கின்றான் -எதற்கு
பூமியில் இன்னும் இருக்கின்றான்
சொல்லிக் கொடுத்தும் பழனில்லையே -நன்கு
சுகம் பெற வழியின்னும் பிறக்கலியே
கள்ளமுள்ள மனிதர்கள் திருந்தலியே -அந்த
கடவுள் மீண்டுமிங்கே எனோ பிறக்கலியே
நடக்கிற நாடகம் ஒன்றுமே புரியவில்லை
கொள்ளை யடித்தவன் வாழுகிறான் -அதை
குற்றமெனத் தடுத்தவன் மாளுகிறான்
பாலினில் நீரையும் கலக்கின்றான் -பாழும்
பரத்தையை உயர்வாய் மதிக்கின்றான்
வேலியைப் பிரித்துமே எரிகின்றான் -வயலில்
விளைஞ்சதை திருடியே செல்கின்றான்
பெண்களை அடிமையாய் நினைக்கின்றான் -அவர்
பெரும் பொருள் அனைத்தையும் பறிக்கின்றான்
கண்களை விற்று சித்திரம் வாங்குதல் போல் -நல்ல
கருத்தினை இழந்து எங்கோ திரிகின்றன
அறிஞர்கள் சொன்னதைக் கேட்கவில்லை -அவரடி
பற்றி நடந்திட என்னவோ மனமுமில்லை
எரிதழல் நடுவினில் சிரிக்கின்றான் -எதற்கு
பூமியில் இன்னும் இருக்கின்றான்
சொல்லிக் கொடுத்தும் பழனில்லையே -நன்கு
சுகம் பெற வழியின்னும் பிறக்கலியே
கள்ளமுள்ள மனிதர்கள் திருந்தலியே -அந்த
கடவுள் மீண்டுமிங்கே எனோ பிறக்கலியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக