புதன், 11 ஏப்ரல், 2018

கடவுள் 341

நல்லவர்    வாழ்ந்திடக்   காலமில்லை -இங்கே
நடக்கிற   நாடகம்   ஒன்றுமே   புரியவில்லை
கொள்ளை   யடித்தவன்   வாழுகிறான் -அதை
குற்றமெனத்  தடுத்தவன்    மாளுகிறான்

பாலினில்   நீரையும்  கலக்கின்றான் -பாழும்
பரத்தையை   உயர்வாய்   மதிக்கின்றான்
வேலியைப்   பிரித்துமே  எரிகின்றான் -வயலில்
விளைஞ்சதை   திருடியே  செல்கின்றான்

பெண்களை  அடிமையாய்   நினைக்கின்றான் -அவர்
பெரும் பொருள்  அனைத்தையும்  பறிக்கின்றான்
கண்களை  விற்று சித்திரம்  வாங்குதல் போல் -நல்ல
கருத்தினை  இழந்து  எங்கோ  திரிகின்றன

அறிஞர்கள்  சொன்னதைக்  கேட்கவில்லை -அவரடி
பற்றி  நடந்திட  என்னவோ  மனமுமில்லை
எரிதழல்  நடுவினில்  சிரிக்கின்றான் -எதற்கு
பூமியில்  இன்னும்   இருக்கின்றான்

சொல்லிக்  கொடுத்தும்  பழனில்லையே -நன்கு
சுகம் பெற   வழியின்னும்  பிறக்கலியே
கள்ளமுள்ள  மனிதர்கள்  திருந்தலியே -அந்த
கடவுள்   மீண்டுமிங்கே  எனோ பிறக்கலியே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக