பல்லவி :
வந்தால் வர ச் சொல்லடி -தோழி
வடிவழகன் முருகன் வள்ளி மணாளன் (வந்தால்)
அனுபல்லவி
புள்ளி மயில் ஏறிவரும் பொன்னிற ரூபன் -இந்த
பூமியைக் காத்திடும் புண்ணிய சீலன் (வந்தால் )
சரணங்கள்
சூரனை வதைத்திட்ட எங்கள் சுப்ரமண்யன் -குண
சுந்தரி தெய்வ யானை சுகம் பெறும் பாலன்
ஆறுமுகம் கொண்ட அமிழ்தினும் இனியன் -தினம்
அடியவர் தொழுதிட நலம் பெறுவார் என்றே (வந்தால்)
முத்தமிழ் காத்திடும் மூர்த்தியும் அவனே -வரும்
மோக இருள் நீக்கும் மோகனன் அவனே
எத்திசையும் போற்றும் எங்களின் பெருமானே -தூய
ஈசனார் திருமகனே ஏழைகள் தலைவனே (வந்தால்)
வேலினைக் கொண்டே வரும் வினைகள் தீர்ப்பான் -கொடும்
வெஞ்சமர் களத்தினில் வெற்றியே குவிப்பான்
காலினில் சிலம்பு கொஞ்ச நம் கந்தனும் வருவான் -இளம்
கன்னி எனைகூடியே களிப்பினை தருவான் (வந்தால்)
மலையினில் குடியிருக்கும் திருமாலின் மருகன் -வாடும்
மக்களின் துயர் நீக்கும் பொக்கிசம் குகனே
கலைகளின் அதிபன் கண்கவர் முருகனே -நல்ல
கற்பகத் தருவாய் பல அற்புதங்கள் செய்பவன் (வந்தால் )
வந்தால் வர ச் சொல்லடி -தோழி
வடிவழகன் முருகன் வள்ளி மணாளன் (வந்தால்)
அனுபல்லவி
புள்ளி மயில் ஏறிவரும் பொன்னிற ரூபன் -இந்த
பூமியைக் காத்திடும் புண்ணிய சீலன் (வந்தால் )
சரணங்கள்
சூரனை வதைத்திட்ட எங்கள் சுப்ரமண்யன் -குண
சுந்தரி தெய்வ யானை சுகம் பெறும் பாலன்
ஆறுமுகம் கொண்ட அமிழ்தினும் இனியன் -தினம்
அடியவர் தொழுதிட நலம் பெறுவார் என்றே (வந்தால்)
முத்தமிழ் காத்திடும் மூர்த்தியும் அவனே -வரும்
மோக இருள் நீக்கும் மோகனன் அவனே
எத்திசையும் போற்றும் எங்களின் பெருமானே -தூய
ஈசனார் திருமகனே ஏழைகள் தலைவனே (வந்தால்)
வேலினைக் கொண்டே வரும் வினைகள் தீர்ப்பான் -கொடும்
வெஞ்சமர் களத்தினில் வெற்றியே குவிப்பான்
காலினில் சிலம்பு கொஞ்ச நம் கந்தனும் வருவான் -இளம்
கன்னி எனைகூடியே களிப்பினை தருவான் (வந்தால்)
மலையினில் குடியிருக்கும் திருமாலின் மருகன் -வாடும்
மக்களின் துயர் நீக்கும் பொக்கிசம் குகனே
கலைகளின் அதிபன் கண்கவர் முருகனே -நல்ல
கற்பகத் தருவாய் பல அற்புதங்கள் செய்பவன் (வந்தால் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக