வியாழன், 19 ஏப்ரல், 2018

அன்பு 366

அன்பு   என்றும்    வாழுமே -இது
அகிலம்    சொல்லும்    நீதியே
பண்பு    நெறியில்   வாழ்பவர் -இந்த
பாரில்    தோற்றதும்   இல்லையே

அன்பை   எங்கிலும்   விதைக்கலாம் -அதனால்
ஆயிரம்    நன்மைகள்    விளையுமே
பண்பாய்   பிறரிடம்   பழகுதல் -இங்கு
பலரின்    உயர்வுக்கு    அடிப்படை

அன்பு   சொன்ன   ஏசுவும் -நம்
அருமை   புத்தர்   காந்தியும்
அன்று   சொன்னதை    நினைப்பீரே -நீவிர்
அனைவர்க்கும்   உதவியாய்   திகழ்வீரே

கூடி யே   வாழ்தல்    சிறப்பு தான் -நல்ல
குடும்பம்    நமது    பொறுப்புதான்
தேடியே    செல்வம்   பெருக்கலாம் -இந்திய
தேசம்   உயர்ந்திட   செய்யலாம்

வாழும்    காலம்    யாவிலும் -மண்ணில்
வளமை   பெருகிட    உழைக்கலாம்
சூழும்     பகையை     அழிக்கலாம் -நல்ல
சுதந்திர    மனிதனாய்  வாழலாம்

நாடு   என்பது   ஒன்றுதான் -மனிதர்
நல்வழி    நடப்பது    என்றுதான்
ஏடுகள்    போற்றிட    வாழுவீர் -பிறர்
இதயத்தை    என்றுமே    ஆளுவீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக