அன்பு என்றும் வாழுமே -இது
அகிலம் சொல்லும் நீதியே
பண்பு நெறியில் வாழ்பவர் -இந்த
பாரில் தோற்றதும் இல்லையே
அன்பை எங்கிலும் விதைக்கலாம் -அதனால்
ஆயிரம் நன்மைகள் விளையுமே
பண்பாய் பிறரிடம் பழகுதல் -இங்கு
பலரின் உயர்வுக்கு அடிப்படை
அன்பு சொன்ன ஏசுவும் -நம்
அருமை புத்தர் காந்தியும்
அன்று சொன்னதை நினைப்பீரே -நீவிர்
அனைவர்க்கும் உதவியாய் திகழ்வீரே
கூடி யே வாழ்தல் சிறப்பு தான் -நல்ல
குடும்பம் நமது பொறுப்புதான்
தேடியே செல்வம் பெருக்கலாம் -இந்திய
தேசம் உயர்ந்திட செய்யலாம்
வாழும் காலம் யாவிலும் -மண்ணில்
வளமை பெருகிட உழைக்கலாம்
சூழும் பகையை அழிக்கலாம் -நல்ல
சுதந்திர மனிதனாய் வாழலாம்
நாடு என்பது ஒன்றுதான் -மனிதர்
நல்வழி நடப்பது என்றுதான்
ஏடுகள் போற்றிட வாழுவீர் -பிறர்
இதயத்தை என்றுமே ஆளுவீர்
அகிலம் சொல்லும் நீதியே
பண்பு நெறியில் வாழ்பவர் -இந்த
பாரில் தோற்றதும் இல்லையே
அன்பை எங்கிலும் விதைக்கலாம் -அதனால்
ஆயிரம் நன்மைகள் விளையுமே
பண்பாய் பிறரிடம் பழகுதல் -இங்கு
பலரின் உயர்வுக்கு அடிப்படை
அன்பு சொன்ன ஏசுவும் -நம்
அருமை புத்தர் காந்தியும்
அன்று சொன்னதை நினைப்பீரே -நீவிர்
அனைவர்க்கும் உதவியாய் திகழ்வீரே
கூடி யே வாழ்தல் சிறப்பு தான் -நல்ல
குடும்பம் நமது பொறுப்புதான்
தேடியே செல்வம் பெருக்கலாம் -இந்திய
தேசம் உயர்ந்திட செய்யலாம்
வாழும் காலம் யாவிலும் -மண்ணில்
வளமை பெருகிட உழைக்கலாம்
சூழும் பகையை அழிக்கலாம் -நல்ல
சுதந்திர மனிதனாய் வாழலாம்
நாடு என்பது ஒன்றுதான் -மனிதர்
நல்வழி நடப்பது என்றுதான்
ஏடுகள் போற்றிட வாழுவீர் -பிறர்
இதயத்தை என்றுமே ஆளுவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக