சனி, 14 ஏப்ரல், 2018

சித்திரைப் பெண்351

சித்திரைப்  பெண் நீ    நில்லடி -உனக்கு
நல்ல  சேதி    சொல்கிறோம்   கேளடி
முத்திரை   பதித்திட   வருபவளே -உலகில்
மூளும்   பகைதனை   அழிப்பவளே 

மாதம்   மும்மாரி   மழை   பொழிய -இனி
மண்ணகம்   எங்கும்   செழித்திருக்கும்
வேத  நெறி   முறை   நிலைத்திருக்கும் -அதில்
மேம்பட்ட   கலைகள்   வழி  நடத்தும்

ஏறிய   விலை வாசி   குறைந்து  விடும் -நம்
இதயங்கள்   மகிழ்ச்சியில்   நிறைந்துவிடும்
காரியம்    யாவும்   கை  சிறக்கும் -புதிய
கவிதைகள்   எங்கிலும்   பிறப்பெடுக்கும்

தண்ணீர்ப்    பஞ்சமும்   தீர்ந்து  விடும் -அறிவுத்
தாகம்     எங்குமே    தலை யெடுக்கும்
கண்ணீர்   வடித்திட   வழி யில்லாமல் =என்றும்
கடவுள்   நமக்கென்றும்    துணையிருக்கும்

நீரும்    நிலமும்     கொழித்திருக்கும் -இங்கு
நிம்மதி    ஒன்றுதான்    கை கொடுக்கும்
கூறிடும்    செய்திகள்   அனைத்தையும் -இந்த
குவலயம்    பெறுவது    நிச்சயமே

சித்திரைப்     பெண்ணின்   சிறப்பு   சொல்லி -இன்று
சிங்காரப்     பெண்களே   சேர்ந்து    கும்மியடி
இத்தரை    வாழ்ந்திடப்    பிறப்பெடுத்தாள் -அந்த
இன்பத்தில்    நாமும்     மகிழ்ந்திடுவோம்

தமிழ்  வருடப்   பிறப்பு  பற்றிய   சிறப்புப்   பாடல் 14-4-2018;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக