கோபியர் மனதினில் கோபாலன் -அங்கே
கொட்டிக் கிடக்குது குதூகலம்
பாவம் தீர்க்க வந்த பரந்தாமன் --அவன்
பணிந்தவர் அருள் தரும் குணசீலன் (கோபியர்)
யசோதை மகனாய் உருவெடுத்தான் --அன்று
யதுகுல சிங்கமாய் வளர்ந்து வந்தான்
ராதையின் கண்ணன் செய்தது ராச லீலை --அதனை
நயம் பட ச் சொல்வது தான் என்வேலை (கோபியர் )
குழலினைக் கைகளில் எடுத்தவனாம --பல
கொடுமைகள் வருவதை தடுத்தவனாம்
மழலையர் நடுவினில் நம் மணி வண்ணன் --பிறரை
மயக்கியே சிரிப்பதில் அவன் மன்னன் (கோபியர் )
பார்த்தனுக்கு சாரதியாய் சென்றாயே --நீ
பாரதப் போரினிலே வென்றாயே
தூற்றுவோர் தூற்றினும் தூது சென்றாய் --மண்ணில்
துணைவனாய் நீதிக்கு துணை புரிந்தாய் (கோபியர்)
பாரதம் தோன்றிட க் காரணம் நீ --அந்த
பாண்டவர் உயர்ந்திடப் பாதையும் நீ
கௌரவர் அழிந்திட வழி யமைத்தாய் --நாட்டின்
கெளரவம் காத்திட வீண் பழி சுமந்தாய் கோபியர்)
கொட்டிக் கிடக்குது குதூகலம்
பாவம் தீர்க்க வந்த பரந்தாமன் --அவன்
பணிந்தவர் அருள் தரும் குணசீலன் (கோபியர்)
யசோதை மகனாய் உருவெடுத்தான் --அன்று
யதுகுல சிங்கமாய் வளர்ந்து வந்தான்
ராதையின் கண்ணன் செய்தது ராச லீலை --அதனை
நயம் பட ச் சொல்வது தான் என்வேலை (கோபியர் )
குழலினைக் கைகளில் எடுத்தவனாம --பல
கொடுமைகள் வருவதை தடுத்தவனாம்
மழலையர் நடுவினில் நம் மணி வண்ணன் --பிறரை
மயக்கியே சிரிப்பதில் அவன் மன்னன் (கோபியர் )
பார்த்தனுக்கு சாரதியாய் சென்றாயே --நீ
பாரதப் போரினிலே வென்றாயே
தூற்றுவோர் தூற்றினும் தூது சென்றாய் --மண்ணில்
துணைவனாய் நீதிக்கு துணை புரிந்தாய் (கோபியர்)
பாரதம் தோன்றிட க் காரணம் நீ --அந்த
பாண்டவர் உயர்ந்திடப் பாதையும் நீ
கௌரவர் அழிந்திட வழி யமைத்தாய் --நாட்டின்
கெளரவம் காத்திட வீண் பழி சுமந்தாய் கோபியர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக