திங்கள், 30 ஏப்ரல், 2018

யசோதை 399

கோபியர்  மனதினில்  கோபாலன் -அங்கே 
கொட்டிக்  கிடக்குது  குதூகலம்
பாவம்  தீர்க்க  வந்த  பரந்தாமன் --அவன்
பணிந்தவர்  அருள் தரும்  குணசீலன்  (கோபியர்)
யசோதை  மகனாய்  உருவெடுத்தான் --அன்று
யதுகுல   சிங்கமாய்  வளர்ந்து வந்தான்

ராதையின்  கண்ணன்  செய்தது  ராச லீலை --அதனை
நயம்  பட ச்  சொல்வது  தான்  என்வேலை  (கோபியர் )

குழலினைக்  கைகளில்  எடுத்தவனாம --பல
கொடுமைகள்  வருவதை  தடுத்தவனாம்
மழலையர்  நடுவினில்  நம்  மணி வண்ணன் --பிறரை
மயக்கியே   சிரிப்பதில்  அவன் மன்னன் (கோபியர் )

பார்த்தனுக்கு  சாரதியாய்  சென்றாயே --நீ
பாரதப்  போரினிலே  வென்றாயே
தூற்றுவோர்  தூற்றினும்  தூது  சென்றாய் --மண்ணில்
துணைவனாய்  நீதிக்கு  துணை புரிந்தாய் (கோபியர்)

பாரதம்  தோன்றிட க்  காரணம்   நீ --அந்த
பாண்டவர் உயர்ந்திடப்  பாதையும்   நீ
கௌரவர்  அழிந்திட  வழி யமைத்தாய் --நாட்டின்
கெளரவம்   காத்திட  வீண் பழி   சுமந்தாய் கோபியர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக